இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் மேத்யூஸ், இங்கிலாந்து மற்றும் நடுவர்கள் ஆகியோர் போட்டியின் நடுவே தவறான பந்தை மாற்றி இருந்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 236 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதற்குப் பிறகு பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணி 358 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 41வது ஓவரில் இங்கிலாந்து அணி ஏற்கனவே வீசிக் கொண்டிருந்த பந்துக்கு பதிலாக வேறு பந்தை மாற்றியது.
புதிய பந்தில் வழுவழுப்பான பகுதி இருப்பதால் கிரிப் மற்றும் ஸ்விங் நன்றாக கிடைக்க, 65 ரன்கள் விளையாடிக் கொண்டிருந்த அணியின் மூத்த வீரர் மேத்யூஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் திரும்பவும் இலங்கை அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது. இந்த நிலையில் பந்து மாற்றும் முறைகளில் கடுமையான விதிகள் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்டத்தின் 41வது ஓவர் வரை இங்கிலாந்து அணியிடம் திட்டம் தீர்ந்து விட்டதாகவும் பந்தை மாற்றிய பிறகு மீண்டும் போட்டிக்குள் வந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர்களது திட்டம் அனைத்தும் வேலை செய்யவில்லை என்ற தோன்றிய நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக புதிய பந்து மாற்றப்பட்டது. இது குறித்து அவர்கள் மாற்றுவதற்கு பழைய போதுமான பந்துகள் இல்லை என்று விளக்கம் கூறினார்கள். அது ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றியது.ஒரு பந்தின் பளபளப்பை போக்க கடினமாக உழைக்க வேண்டும். நாங்கள் அதை செய்து கொண்டிருந்தபோது மீண்டும் புதிய பந்து மாற்றப்பட்டதால் முற்றிலும் மாறுபட்ட ஆட்டமாக அமைந்தது.
தற்போது மாற்றப்பட்ட பந்து எந்த ஆண்டு பந்துகள் என்று தெரியவில்லை. ஆனால் பந்து மாற்றும் முறைகளில் திட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பேட்ஸ்மேன்களுக்கு பாதகமாக முடியவே வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படி பண்ணாதிங்க.. வரலாறு காணாத சலிப்பு – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி பந்து மாற்றியதில் சர்ச்சை எழுந்தது. இதனால் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்ததை அடுத்து இங்கிலாந்து அணி கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று திரும்பவும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.