கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இளைஞர்கள் குழந்தைகளுடன் சச்சின் கேரம் போர்டு விளையாடியதின் காரணம் என்ன?

கிரிக்கெட் உலகில் கோட் என்று அழைக்கப்படும் எந்தக் காலத்திலும் சிறந்த வீரருக்கான இடத்தில் சச்சினுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. அதே இந்திய கிரிக்கெட்டில் சச்சின் கோட் என்பதை எல்லாம் தாண்டி காட் அதாவது கடவுள் என்ற நிலைமையில் இருக்கிறார்!

- Advertisement -

உலகளவில் இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவு வெளியில் அறியப்பட்டவர்களில் கிரிக்கெட்டில் இருந்த சச்சினும் ஒருவர். இந்தக் காரணத்தினாலே சச்சின் உலகத்திற்கான இந்தியாவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்!

சச்சின் தன் விளையாட்டு திறமை தாண்டி, தனது தனிப்பட்ட தனிமனித ஒழுக்கம் மற்றும் செயல்பாடுகளினாலும் வெளியில் மக்களால் அதிகம் விரும்பப்படக்கூடிய ஒரு நபர்!

தற்பொழுது சச்சின் சில இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் கேரம் போர்டு விளையாடும் புகைப்படம் வெளியாகி அது பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டு வருகிறது!

- Advertisement -

காரணம் என்னவென்றால் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். 2014 ஆம் ஆண்டு இப்படியான குழந்தைகளுக்கு ஹேப்பி பீட் ஹோம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது!

மும்பை மடுங்காவில் உள்ள இந்த அமைப்பிற்குதான் சச்சின் சென்று அங்குள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் கேரம் போர்டு விளையாடி அவர்களை மகிழ்வித்தார். கிறிஸ்மஸ் வருவதை ஒட்டி அந்த விழாவை கொண்டாடுவதற்காக இவ்வாறு சச்சின் இந்த அமைப்பிற்கு சென்று அங்கிருந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்வித்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது!

Published by