அடுத்த வருடமும் உங்களை மஞ்சள் ஜெர்சியில் பார்க்கலாமா ? – ரசிகர்களுக்கு தோனி கொடுத்த பதில்

0
1091
MS Dhoni CSK Captain

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆயிரம் போது அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கும் சென்னை அணி 11 ஓவர்களில் 100 ரன்கள் குவித்துள்ளது. சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்கள் கான்வே மற்றும் ருத்ராஜ் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா நடந்த போட்டி வரை தலைமை தாங்கி வந்த நிலையில் இன்று முதல் மகேந்திர சிங் தோனி சென்னை அணியை தலைமை தாங்குகிறார். 8 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி கண்டுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் சுமாராகவே இருந்துள்ளது. ஆட்டத்தில் கவனம் செலுத்த கேப்டன் பதவியை மீண்டும் மகேந்திர சிங் தோனியிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். தோனியின் எந்தவித மறுப்பும் இன்றி கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடமும் மஞ்சள் ஜெர்சியில் என்னைப் பார்க்கலாம்

இன்று டாஸ் போட்ட பின்னர், மகேந்திர சிங் தோனி அனைவருக்கும் ஒரு நற்செய்தியை கூறினார்.”அடுத்த வருடமும் இதே மஞ்சள் ஜெர்சியில் என்னை நீங்கள் பார்க்கலாம். ஒன்று இதுவாக இருக்கலாம் அல்லது நீங்கள் நினைக்காத ஒன்றாகக் கூட இருக்கலாம்” என்று சூசகமாக கூறினார்.

- Advertisement -

அதாவது எப்பொழுதும் போல ஒரு வீரராக, அல்லது கோச்சிங் துறையில் ஏதேனும் ஒரு பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது போல கூறியிருக்கிறார். எப்படி இருந்தாலும் சென்னை அணியில் மகேந்திர சிங் தோனியின் பயணம் தொடரும் என்கிற செய்தி ரசிகர்கள் அனைவரையும் சந்தோஷம் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.