யூ ந்நோ.. ரெண்டு கையிலயும் பவுலிங் பண்ண போறேன்.. நான் வீசாத பந்தே கிடையாது – ரியான் பராக் மீண்டும் அதிரடி!

0
256
Paragg

இந்திய மாநிலங்களில் கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலம் அசாம். அப்படியான ஒரு சிறிய கிரிக்கெட் மாநிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய இளம் வீரர்தான் ரியான் பராக்!

இவரை நாம் பல காலமாக தொடர்ச்சியாக பார்த்து வருவது போல தோன்றும். ஆனால் இவருக்கு தற்போது வயது 21தான். ஆனால் இதற்குள் இவர் 5 ஐபிஎல் சீசன்கள் விளையாடிவிட்டார்.

- Advertisement -

ரியான் பராக் 2001 ஆம் ஆண்டு பிறந்த வீரர். 21 வயதான இவர் 2019 ஆம் ஆண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பதினாறாவது வயதில் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

இதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உச்சபட்சமாக சென்று 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 3.80 கோடி கொடுத்து மீண்டும் வாங்கிக் கொண்டது. அந்த அளவிற்கு இவர் மீது அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஆனால் ஐந்து வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான இவருடைய செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்கிக் கொண்டது மட்டும் அல்லாமல் விளையாடவும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கும்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இவர் கடந்த ஆண்டில் சிக்ஸர் அடிப்பது சாதாரணம் என்பது போல ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்க, நெட்டிசன்கள் மொத்தமாக இவர் மேல் பாய்ந்து விட்டார்கள். மேலும் இவரது ஐபிஎல் செயல்பாடும் சுமாராக இருந்ததால், இவர் மீதான கேலி கிண்டல்கள் சமூக வலைதளத்தில் எக்கச்சக்கமாக இருந்தது. தற்பொழுது அப்படியான ஒரு விஷயத்தை மீண்டும் பேசியிருக்கிறார்.

ரியான் பராக் என்ன கூறியிருக்கிறார் என்றால் “நான் எல்லா வகையான பந்துகளையும் மிக நன்றாக வீசி வருகிறேன். மேலும் நான் வலது கை மட்டுமல்லாது தற்பொழுது இடது கையிலும் பந்து வீச பயிற்சி எடுத்து வருகிறேன். நான் வீசாத பந்துகள் என்று எதுவுமே கிடையாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த சீசனில் மட்டும் அனைத்து வடிவத்திலும் சேர்த்து நான் 350 ஓவர்கள் பந்து வீசி 40க்கும் மேற்பட்ட விக்கட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். இந்த முறை நான் ஐபிஎல் தொடரில் 10 வீசவில்லை என்பது உண்மைதான்.

கோல்ப் விளையாடுவதும் ஆன்லைனில் கேமிங் விளையாடுவதும் என்னை கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைக்கிறது. நான் கோபமாக இருக்கும் நேரத்தில் அதை சரி செய்வதற்கு கோல்ப்தான் கை கொடுக்கிறது. கிரிக்கெட்டில் அதை செய்ய முடியாது. இப்படி கிரிக்கெட்டுக்கு வெளியே மனதை செலுத்தி கோபங்களை தணித்து, மீண்டும் வந்து விளையாடும்போது நான் சரியாகவும் ரசித்தும் விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்!

இந்த முறை இவர் கூறியிருக்கும் கருத்துக்கள் மீண்டும் சமூக வலைதளத்தில் பேசுபொருள் ஆகி வருகின்றன. மிகவும் நம்பிக்கையான இளைஞரான இவர், தன்னம்பிக்கையின் அடிப்படையில் பேசக்கூடிய விஷயங்கள் வெளியில் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுவது வருத்தத்துக்குரியதுதான்!