“மொபைல் கையில இருந்தா என்ன வேணா பேசுவியா? ” – கில்லுக்கு பாண்டிங் லாங்கர் கொட்டு!

0
2141
Gill

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பல சர்ச்சைகளில் முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கில் ஸ்லிப்பில் தந்த கேட்சை கேமரூன் கிரீன் சர்ச்சையான முறையில் பிடித்தார்.

- Advertisement -

இதை பலமுறை டிவியில் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியில் அவுட் என்று அறிவித்தார். இதுகுறித்து அப்போதே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறுதியில் பந்தை முதலில் பிடிக்கும் பொழுது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தால் போதும்; பிறகு விரல்களின் இடையில் பந்து தரையில் மோதுவது பிரச்சனை கிடையாது என்று விதி இருக்கிறது. அதனால் அவுட் என்று அறிவிக்கப்பட்டது என்று விளக்கம் கூறப்பட்டது.

நடுவரின் இந்தத் தீர்ப்பில் விரக்தி அடைந்த சுப்மன் கில் தீர்ப்பை விமர்சிக்கும் விதத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கேமரூன் கிரீன் தரையில் படுமாறு பந்தை பிடித்த புகைப்படத்தை பதிவேற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு கைதட்டும் எமோஜியையும் பயன்படுத்தி இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இதற்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த ஆட்டத்தில் மெதுவாகப் பந்து வீசியதற்காக இந்திய அணியில் எல்லோருக்கும் 100% ஊதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கில் 115 சதவீதம் அபராதம் கட்டுகிறார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர்
“இந்தக் கால கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கின்ற பெரிய சவால் அவர்களிடம் நிறைய சமூக வலைதளங்கள் இருக்கிறது என்பதும்தான். கில் ட்வீட் சற்று பொறுப்பற்றது என்று நினைக்கிறேன். இது அவரது சில அனுபவமின்மைகளைக் காட்டுகிறது!” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ” அவரின் செயல் குறித்து முழு உலகமும் பேசப் போகிறது. அதனால் நான் இது குறித்து எந்த கருத்தும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். நிச்சயமாக அபராதம் இல்லை இடைநீக்கம் ஏதாவது வரும்!” என்று கூறியிருந்தார்!