“தங்க பதக்கம் வெல்லனும்” – கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ஆசிய கேம்ஸ் குறித்து அதிரடி பேட்டி!

0
416

19ஆவது ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கி அக்டோபர் எட்டாம் தேதி முடிவடைய இருக்கிறது.

தடகளம் ,ஹாக்கி,ஃபுட்பால், வாலிபால்,பாக்சிங். மல்யுத்தம் என பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் இடம்பெறும் இந்த போட்டி தொடரானது ஆசிய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் கோவில் தொற்று காரணமாக இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது .

- Advertisement -

தற்போது இந்த போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. கடந்த ஆசிய போட்டிகளிலும் இடம் பெற்ற கிரிக்கெட் இந்த வருட ஆசிய போட்டிகளிலும் இடம் பெற்று இருக்கிறது. கடந்த உரை இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றது . இந்த முறை பிசிசிஐ முதல் முதலாக ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு கிரிக்கெட் அணியை அனுப்ப தயாராக இருக்கிறது .

இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தேர்வு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான ருத்ராஜ் கெயிக்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியில் ஜெய் ஸ்வால் ரிங்கு சிங் திலக் வர்மா போன்ற வருங்கால நம்பிக்கையை நட்சத்திரங்களும் இடம் பெற்று இருக்கின்றனர் .

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் ருத்ராஜ் கெயிக்வாட். இது தொடர்பாக பிசிசிஐ டிவியில் பேசியிருக்கும் அவர் தன்னை கேப்டனாக தேர்வு செய்த தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐ மேனேஜ்மென்ட்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசியிருக்கும் அவர் ” அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தனது நாட்டிற்காக ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கு பெறுவது நிச்சயம் பெருமையான ஒரு விஷயம். மேலும் நமது நாட்டிற்காக பதக்கத்தை வெல்வது சிறுவயதிலிருந்தே இருக்கக் கூடிய ஒரு கனவு. நிறைய தடகள வீரர்கள் நம் தேசத்திற்காக பதக்கங்களை வேண்டி இருப்பதை நாம் டிவியில் பார்த்திருக்கிறோம். இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று பதக்கம் பெறும் மேடையில் நின்று தேசிய கீதத்தை பாடுவது தான் எனது தற்போதைய கனவு” எனக் கூறியிருக்கிறார் ருத்ராஜ்.

மேலும் தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” பிசிசிஐ, நிர்வாக குழு மற்றும் தேர்வாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வீரராக இந்திய அணிக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதே பெருமை அதிலும் என்னை இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் ஆக தேர்வு செய்து இருப்பதற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.