“வில்லியம்சன் ரிஸ்க்.. பேசாம அவருக்கு இதை செஞ்சிடுங்க!” – கவாஸ்கர் இந்திய அணிக்கு வித்தியாசமான அட்வைஸ்!

0
1562
Gavaskar

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்த்து விளையாட இருக்கின்றன.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு நியூசிலாந்து அணி பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் நுழைந்தது. ஆனால் வழக்கம்போல் எல்லா ஐசிசி தொடர்களிலும் பெரும்பாலும் அரையிறுதியை எட்டி விடுவதைப் போல, இந்த முறையும் அரையிறுதிக்கு வந்துவிட்டது.

- Advertisement -

மிகக்குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபில் தொடரில் காயம் அடைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தாமதமாகவே உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆரம்பித்தார். ஆனால் விளையாடிய முதல் போட்டியிலேயே காயமடைந்து மீண்டும் விளையாட முடியாமல் சென்றார்.

இதற்கு அடுத்து மீண்டும் மிக முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வந்து சிறப்பாக விளையாடி 90 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தார். இரண்டே போட்டிகள் மட்டும் விளையாடி இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்திருக்கிறார்.

மேலும் இந்தியாவில் விளையாடினாலும் கூட நியூசிலாந்து அணியின் பிரதான சிலர் பந்துவீச்சாளர் சோதிக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது நியூசிலாந்து அணி பேட்டிங் வரிசையை பலப்படுத்தி, பவுலிங் யூனிட்டில் மூன்று பேரை மட்டும் நம்பி களம் இறங்கி சாதித்து வருகிறது. பேட்டிங் வரிசை பலமாக இருக்கின்ற காரணத்தினால், அரையிறுதியையும் எட்டிவிட்டது.

இதில் கேன் வில்லியம்சனை எப்படி சமாளிப்பது என்று பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “கேன் வில்லியம்சன் ஒரு சிறந்த வீரர். பெரிய இடைவெளி விட்டு விளையாட வந்தாலும் கூட, அவர் ரன்கள் எடுப்பதில் அது பெரிய மாற்றத்தை உண்டாக்கப் போவது கிடையாது.

தேவைப்பட்டால் அவர் ஸ்பின்னை சமாளிக்க சிறப்பாக இறங்கி வந்து விளையாடக் கூடியவர். மேலும் அவர் கிரீசுக்குள் பின்சென்றும் நன்றாக விளையாட கூடியவர். குல்தீப் அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை. குல்தீப் குறித்து வில்லியம்சன் கவலைப்பட மாட்டார்.

நீங்கள் அவரை சமாளிக்க விரும்பினால், அவருக்கு பவுண்டரிகள் தராமல், சிங்கிள் ரன் தந்து எதிர்முனைக்கு தள்ளி விடுங்கள்!” என்று இந்திய அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்!