முதல் போட்டியில் விளையாடுவாரா எம்.எஸ் தோனி? – சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ கொடுத்த புதிய அப்டேட்!

0
138

உலக கிரிக்கெட் டி20 லீக் போட்டிகளுக்கு எல்லாம் முதன்மையானதும் முன்மாதிரியானதுமான இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து துவங்க இருக்கிறது .

நாளை நடைபெற இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்று தீர்ந்து விட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களே ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்திற்காக காத்திருக்கின்றனர் . கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் வீரர்களுக்கான காயம் அதிகமாக இருக்கிறது. போட்டிகள் தொடங்கும் முன்னரே பல அணிகளின் வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறிது வருத்தத்தை அளித்துள்ளது.

இந்தப் பட்டியலில் தற்போது தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டன்மான எம்எஸ் தோனி. அகமதாபாத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மழை பயிற்சியை தவிர்த்து இருந்தார் தோனி. மேலும் சிஎஸ்கே அணிகளுக்கிடையே நடைபெற்ற பயிற்சி போட்டிகளின் போதும் ரன் ஓடுவதற்கு சிரமப்பட்டார்.

இதனால் நாளை நடைபெறும் போட்டியில் அவர் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. தோனி ஒருவேளை விளையாடவில்லை என்றால் விக்கெட் கீப்பராக நியூசிலாந்து அணியின் டேவான் கான்வே அல்லது அம்பத்தி ராயுடு இருவரில் ஒருவர் செயல்படுவார் என ரசிகர்கள் கணித்து வந்தனர் மேலும் பென் ஸ்டோக்ஸ் அல்லது ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனியின் காயம் குறித்த புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தத் தகவல் என்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்த காசி விஸ்வநாதன் “நாளைய போட்டியில் எம்.எஸ்.தோனி 100% விளையாடுவார்”என தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.