103 ரன்.. 245 ஸ்ட்ரைக் ரேட்.. சிஎஸ்கேவை பந்தாடிய 3.8 கோடி வீரர்.. யார் இந்த பிரியன்ஷ் ஆர்யா.?

0
676

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களை குவித்துள்ளது. 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது, பஞ்சாப் அணி கொஞ்சம் கூட அதிரடியை குறைக்காமல் பேட்டிங்கில் விளாசி தள்ளியது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்களை விளாசி சாதித்துள்ளார்.

9 சிக்சரால் அதிர்ச்சி

அதிலும் பதிரானா பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ், அஸ்வின் பவுலிங்கில் தொடர்ந்து 2 சிக்ஸ் என்று மொத்தமாக 9 சிக்சரகளை அவர் விளாசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக போட்டியிலேயே பிரியன்ஷ் ஆர்யா கவனத்தை ஈர்த்தாலும், இந்த போட்டியில் தனது முழு விஸ்வரூபத்தை காட்டி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யாவை பஞ்சாப் அணி ரூ.3.8 கோடிக்கு வாங்கியது. டெல்லியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டிலேயே நட்சத்திர வீரராக உருவாகினார். டெல்லி வீரர்களுக்கான டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா களமிறங்கினார்.

யார் இந்த பிரியன்ஷ் ஆர்யா

மொத்தமாக 10 இன்னிங்ஸ்களில் 608 ரன்களை விளாசி ஆச்சரியப்படுத்தினார். ஒரு போட்டியில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக தொடக்க வீரராக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா, 7 போட்டிகளில் விளையாடி 222 ரன்களை விளாசி தள்ளினார்.

- Advertisement -

கிட்டத்தட்ட அபிஷேக் சர்மாவுக்கு நிகரான பேட்ஸ்மேனாக பிரியன்ஷ் ஆர்யா பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக, ஐபிஎல் தொடரில் யூசுப் பதானுக்கு பின் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை பிரியன்ஷ் ஆர்யா படைத்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -