வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்காவில் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி டிராவிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இதற்குப் பிறகு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் ஏற்கனவே டி20 உலக கோப்பை நடைபெற்ற நிலையில் சூப்பர் 8 சுற்றில் இரண்டு அணிகளும் மோதி அதில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை டி20 உலக கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையும் கோட்டை விட்டது. அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா விளையாடுகின்ற முதல் டி20 போட்டி இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகின்ற போட்டி என்பதால் அதிரடி வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
தென் ஆப்பிரிக்கா அணியிலும் தரமான வீரர்கள் இருப்பதால் இத்தொடரில் இரண்டு அணிகளும் சரி சமமான போட்டியுடன் விளையாடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டாவது போட்டியில் 22ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக ஃபேன் கோடு ஆப் மற்றும் இணையதளத்தில் கண்டுகளிக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோமன் போவல் கேப்டன் ஆகவும், தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டன் ஆகவும் தலைமை தாங்க உள்ளனர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரான், சாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் போன்ற அதிரடி வீரர்கள் இந்த தொடருக்கு சுவாரசியம் சேர்ப்பார்கள்.
இதையும் படிங்க:ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்.. மணிஷ் பாண்டே தனியாளாக போராட்டம்.. டி20ல் அரிய நிகழ்வு – மஹாராஜா டிராபி 2024
இந்த மூன்று போட்டிகளும் டிரிடினாட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிரடிக்கு பெயர் போன வீரர்கள் இந்த இரண்டு அணிகளிலும் இருப்பதால் இந்த போட்டித் தொடர் நிச்சயமாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. மேலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இரண்டு அணிகளுமே தரமாக விளங்குவதால் இது மக்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.