ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்.. மணிஷ் பாண்டே தனியாளாக போராட்டம்.. டி20ல் அரிய நிகழ்வு – மஹாராஜா டிராபி 2024

0
424
Manish

தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இன்று பெங்களூர் பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மூன்று சூப்பர் ஓவர்கள் சென்று ஆச்சரியப்படுத்தியது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சூப்பர் ஓவர்கள் சென்ற போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது

பெங்களூர் பிளாஸ்டர்ஸ் – ஹூப்ளி டைகர்ஸ்

இன்று இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த ஹூப்ளி டைகர்ஸ் முகமத் தாஹா 14 பந்தில் 31 ரன்கள், கேப்டன் மணிஷ் பாண்டே 22 பந்தில் 33 ரன்கள், முனீஸ்வரன் கௌதம் 24 பந்தில் 30 ரன்கள், மன்வந்த் குமார் 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் ஹூப்ளி டைகர்ஸ் அணி எடுத்தது. லாவிஸ் கவுசல் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. கடைசி ஐந்து பந்தில் 2 ரன்கள் தேவை என்கின்ற நிலையில், 2 விக்கெட்டுகளை இழந்து 1 ரன் மட்டுமே எடுத்து போட்டியை டிரா ஆக்கியது. அந்த அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.

3 சூப்பர் ஓவர்கள் அரிய நிகழ்வு

இதைத்தொடர்ந்து போட்டியின் முதல் சூப்பர் ஓவரில் பெங்களூரு பிளாஸ்டர் அணி 10 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணிக்கு கடைசி 2 பந்தில் இரண்டு ரன் தேவைப்பட 1 ன் மட்டுமே கிடைத்தது. இதனால் போட்டி மீண்டும் டிரா ஆனது. இதில் மனிஷ் பாண்டே 8 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்த முறை முதலில் பேட்டிங் செய்த ஹூப்ளி டைகர்ஸ் அணி 8 ரன்கள் எடுத்தது. இதில் 4 பந்துகளை சந்தித்த மனிஷ் பாண்டே 7 ரன்கள் எடுத்தார். அடுத்து பெங்களூர் பிளாஸ்டர் அணிக்கு முதல் 5 பந்தில் 7 ரன்கள் வர கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 1 ரன் மட்டுமே எடுக்க போட்டி மீண்டும் டிரா ஆனது.

இதையும் படிங்க : 316 ரன்.. லிட்டன் தாஸ் கடைசி நேர அதிரடி.. பாகிஸ்தான் அணிக்கு பங்களாதேஷ் பதிலடி.. முதல் டெஸ்டில் சுவாரசிய நிலை

இதனால் டி20 கிரிக்கெட்டில் அதிக நிகழ்வாக போட்டி மூன்றாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்த முறை முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் பிளாஸ்டர் அணி 13 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்த முறை ஹூப்ளி டைகர்ஸ் அணி முதல் ஐந்து பந்தில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசிப் பந்தில் நான்கு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, முதல் இரண்டு சூப்பர் ஓவரில் சொதப்பிய பேட்ஸ்மேன் மன்வந்த் குமார் இந்த முறை பவுண்டரி அடித்து ஹூப்ளி டைகர்ஸ் அணியை வெல்ல வைத்தார். ஒருவழியாக மனிஷ் பாண்டே போராட்டத்திற்கு வெற்றி வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -