2வது டெஸ்ட் கடைசி நாள்.. நாளை மழை பெய்யுமா.?. ரசிகர்கள் மகிழ்ச்சி.. வெற்றியை நோக்கி இந்திய அணி

0
202

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெறுவதில் தீவிர முயற்சியை செலுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் நாளை மற்றும் கடைசி நாளான ஐந்தாவது நாளில் மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து வானிலை அறிவிப்பு மையம் தற்போது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் மட்டுமே வங்கதேச அணி பேட்டிங் செய்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் மழையின் தொடர்ச்சியான தாக்கத்தால் ஆட்டம் முற்றிலுமாக தடைப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மிக துரிதமாக செயல்பட்டு வங்கதேச அணியை 233 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணி 285 ரன்கள் குவித்த டிக்ளர் செய்தது. அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் வங்கதேச அணி தற்போது 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

எனவே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 50, 100, 150, 200, 250 ரன்கள் என அதிவேகமாக குவித்து உலக சாதனை படைத்திருக்கும் நிலையில் மீதம் இருக்கும் வங்கதேச அணியின் எட்டு விக்கட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றி பெற முயற்சிக்கும்.எனவே ஐந்தாவது நாள் ஆட்டத்தில் வானிலை காலை நேரத்தில் ஓரளவு வெயிலாகவும் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் இருக்கும்.

பிற்பகலில் மேகமூட்டம் 22 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருப்பதாகவும், ஆனால் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் ஐந்தாவது நாள் ஆட்டம் முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று இந்திய அணி முழுமையாக விளையாடியது போல் நாளையும் முழுமையாக விளையாடும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க:இந்தியா டி20 ஆடினாங்க.. அவங்க திட்டமே எங்களுக்கு தெரியல.. எல்லாம் முடிஞ்சு போச்சு – மெஹதி ஹசன் மிராஸ் பேச்சு

அப்படி முழுமையாக விளையாடினால் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை வரலாற்று நிகழ்வோடு வெற்றி பெற முயற்சிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -