நீங்க நம்பவில்லை என்றாலும் இதான் உண்மை… ரிஷப் பண்ட் சீக்கிரம் வரவே முடியாது – திடுக்கிடும் தகவலை சொன்ன இஷாந்த் சர்மா!

0
511

ரிஷப் பண்ட் இருக்கும் நிலைக்கு அடுத்த ஐபிஎல் சீசனும் அவர் வருவது சந்தேகம் தான் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் இஷாந்த் சர்மா. ரிஷப் பண்ட் குறித்து மேலும் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் மாதம் சாலை விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சில வாரங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் பிறகு வீட்டில் சிகிச்சையில் இருந்தார்.

- Advertisement -

பின்னர் உடல்தகுதி சிகிச்சை மற்றும் சில சிகிச்சைகளுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்த ரிஷப் பண்ட், தொடர்ந்து அங்கேயே தங்கி சிகிச்சையுடன் சேர்ந்து பயிற்சியும் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரிஷப் பன்ட் சில ஓவர்கள் பேட்டிங் மற்றும் சில ஓவர்கள் கீப்பிங் என்று செய்து வருவதாக மகிழ்ச்சியான தகவல்களை தேசிய கிரிக்கெட் அகாடமி தரப்பு தெரிவித்தது. ஆங்காங்கே சில புகைப்படங்களும் காண முடிந்தது.

இதற்கு இடையில் ரிஷப் பன்ட் உடல்நிலை குறித்தும், அவர் மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் சக டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் மற்றும் இந்திய வீரர் இஷாந்த் சர்மா திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

“அடுத்த ஐபிஎல் சீசனிலும் ரிஷப் பண்ட்டை பார்ப்பது கடினம். ஏனெனில் அவருக்கு ஏற்பட்டிருப்பது சிறிய காயம் அல்ல. படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டையும் சிறிய அளவில் செய்து வருகிறார். அதன் பிறகு சிறிது தூரம் ஓட்டம் மற்றும் குதித்துச் செல்வது என்று நிறைய இருக்கிறது. அதை எல்லாம் செய்து முடித்து அவர் முழுமையாக குணமடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. நேரம் எடுக்கும்.

ரிஷப் பண்ட் விஷயத்தில் நடந்திருக்கும் ஒரே நல்லது என்னவென்றால், அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை. அப்படி ஒரு நிலை வந்திருக்கும் பட்சத்தில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் குணமடைவதற்கு எடுத்திருக்கும். இருப்பினும் இந்த உலகக்கோப்பைக்குள் அவர் முழு உடல்தகுதியை பெறுவார் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. அதேபோல் அடுத்த ஐபிஎல் சீசனிலும் ரிஷப் பண்ட் ஆடமாட்டார் என்றே கருதுகிறேன். ஏனெனில் உடல்நிலையை பார்க்கையிலும் அப்படித்தான் இருக்கிறது.” என நெருக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டார் இஷாந்த் சர்மா.