“கடந்த வருடம் நாங்கள் செய்த தவறை இப்போதே சரி செய்து விட்டோம், இனி வெற்றி தான்” – ஆர் சி பி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி!

0
113

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தத் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது . லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி இரண்டாம் இடத்தில் இருக்கிறது .

இன்று நடைபெற இருக்கின்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன . ஆர் சி பி அணி தனது முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது அதன் பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை தழுவி வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறது . டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலுமே தோல்வி அடைந்து முதல் வெற்றியைக் காண ஆவலுடன் உள்ளது .

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வனப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இரண்டு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது . ஆர் சி பி அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சில் எப்போதுமே சொதப்பி வரும் ஒரு அணியாகவே பார்க்கப்படுகிறது . தங்கள் அணியினர் எவ்வளவு அதிக ஸ்கோர் செய்தாலும் இறுதியில் இரண்டு ரன்கள் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அளவிற்கு பந்துவீச்சு கடந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது .

தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்த பந்துவீச்சை கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் அடுத்தடுத்த இரண்டு தோல்விகள் அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது . இந்நிலையில் ஆர் சி பி அணியின் போட்டி திட்டங்கள் மற்றும் அணுகுமுறை குறித்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சராஜ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .

இது பற்றி பேசிய முகமது சிராஜ் போட்டிகளுக்கு தயாராவதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் என்னுடைய மனநிலையில் மாற்றம் செய்து கொண்டேன் . ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் அடுத்தவர்கள் நம்மை என்ன சொல்வார்கள் என்று ஒரு பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. சில நேரம் அந்த பயத்தின் காரணமாக என்னுடைய பந்துவீச்சு கூட மோசமாக சென்று இருக்கிறது . இப்போது அந்த பயம் இல்லாமல் இருக்கிறேன் . எதிர்காலத்தையும் இறந்த காலத்தையும் பற்றி யோசிக்காமல் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட் களை எடுக்க விரும்புகிறேன் எனக் கூறி முடித்தார் சிராஜ் .

- Advertisement -

இது பற்றி பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக் ” கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் . இது எங்கள் அணிக்கு மிகவும் நேர்மறையான ஒரு செயல் . மேலும் எங்கள் ஆட்டத்தில் சிறிய பகுதிகளை சரி செய்ய வேண்டி இருக்கிறது . அதையும் செய்து விட்டால் நாங்கள் நன்றாக ஆடுவோம் என கூறி முடித்தார் தினேஷ் கார்த்திக் .