இந்திய அணி மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்குஎதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகத்திற்கு இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை அளித்திருக்கிறார்.
வாசிம் ஜாபர் பங்களாதேஷ் அணியை குறிப்பிடும் பொழுது மிக முக்கியமாக அவர்கள் பாகிஸ்தான் அணியை வென்றது மட்டும் இல்லாமல், வேறு சில விஷயங்களிலும் தங்களுடைய மைண்ட் செட்டை மாற்றிக் கொண்டு முன்னேறி வந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் முன்னேறிய விதம்
ஆரம்பக்கால இந்திய அணி போல பங்களாதேஷ் அணி முதலில் முழுக்க சுழல் பந்துவீச்சை நம்பி இருந்தது. உலக கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்கும் முன்னேறவும் வேகப்பந்துவீச்சை வளர்க்காமல் முடியாது என்பதை உணர்ந்து அதற்கு உள்நாட்டு கிரிக்கெட் தொடர் முதற்கொண்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு லெஜெண்ட் ஆலன் டொனால்ட் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார்.
மேலும் கொஞ்சம் கொஞ்சமாக உள்நாட்டில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தவிர்க்க ஆரம்பித்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து பங்களாதேஷ் அணி விளையாட ஆரம்பித்தது. வேகப்பந்துவீச்சு துறையில் கொஞ்சம் முன்னேறி நியூசிலாந்து சென்று நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசிம் ஜாபர் முக்கிய எச்சரிக்கை
பங்களாதேஷ் அணி குறித்து பேசும் பொழுது வாசிம் ஜாபர் “பங்களாதேஷ் கிரிக்கெட் தங்களுடைய மைண்ட் செட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காரணம் அவர்கள் தங்களது சொந்த நாட்டில் விளையாடும் பொழுது கூட வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் கொண்ட பவுன்ஸ் ஆடுகளங்களில் விளையாட விரும்புகிறார்கள்.சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கூட இப்படியான ஆடுகளத்தில் விளையாடி வென்றார்கள். சுழல் பந்துவீச்சில் மட்டுமே வெற்றி பெறும் அவர்கள் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது”
இதையும் படிங்க : இலங்கை டெஸ்ட்.. நியூசி அதிரடி பிளேயிங் XI.. நால்முனை வியூகம்.. இந்திய அணிக்கு எச்சரிக்கை
“அவர்களிடம் தற்போது நல்ல அனுபவமும் இருக்கிறது. மேலும் நியூசிலாந்தில் சென்று நியூசிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியும் இருக்கிறார்கள். தற்போது அவர்கள் பாகிஸ்தான் சென்று பாகிஸ்தான் அணியும் டெஸ்ட் தொடரில் வீழ்த்தி இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பான முறையில் வெளிப்பட்டு வருகிறார்கள். அவர்களை வழிநடத்த சில அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.