பிசிசிஐ மாதிரி இந்த விஷயத்துல கனவுல கூட பாகிஸ்தானால் வர முடியாது – வாசிம் அக்ரம் வருத்தம்

0
494
Akram

உலக கிரிக்கெட்டில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இருந்து வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் முதன்மை விளையாட்டாக கிரிக்கெட் இருக்கின்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அளவில் வருமானம் உருவாகிறது.

ஏற்கனவே நல்ல வருமானம் கிடைத்து வரும் நிலையில், ஐபிஎல் தொடர் அதைவிட பல மடங்கு வருமானம் கொடுக்கும் மிகப்பெரிய சந்தையாக பிசிசிஐக்கு மாறி இருக்கிறது. இதன் காரணமாக உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பாக மெல்ல மெல்ல பிசிசிஐ வளர்ந்து நிற்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்தியாவில் பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறாத மைதானங்களில் நடத்தி பிசிசிஐ பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்தியா முழுக்க மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களை உருவாக்குவதில் பிசிசிஐ தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு வருகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி கடல் மட்டத்திலிருந்து 1457 மீட்டர் உயரத்தில் இருக்கும் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடத்தப்பட்டது. உலகக் கோப்பை தொடரிலும் இங்கு போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவின் கடைசி மூலைக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதில் பிசிசிஐ குறியாக இருப்பதை இது காட்டுகிறது.

மேலும் இந்தியாவின் தரம்சாலா மைதானம் உலக கிரிக்கெட்டில் சிறந்த அழகான மைதானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மொத்தம் 21 ஆயிரம் பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வசதி இருந்தாலும் கூட, இங்கு விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே இந்த மைதானத்தை பெரிதும் விரும்புகிறார்கள். இதன் பராமரிப்பை பிசிசிஐ மிகச் சிறப்பாக செய்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இதை வைத்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “வடக்கு பாகிஸ்தானில் ஏன் புதிய மைதானங்களை உருவாக்கவில்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் எங்களிடம் இருக்கும் மூன்று மைதானங்களையே நாங்கள் சரியாக பராமரிப்பது இல்லை. டிரோன் காட்சியின் மூலம் கடாபி மைதானத்தின் மேற்கூரை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பார்த்தீர்களா!

இதையும் படிங்க : 2024 ஐபிஎல்.. முதல் 2 போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவான 3 நட்சத்திர வீரர்கள்

நம்மிடம் இருக்கும் மூன்று மைதானங்களை நாம் ஒழுங்காக பராமரிக்க கூட முடியாமல் இருக்கும் பொழுது, தரம்சாலா போன்ற புதிய மைதானங்களை உருவாக்கி பராமரிப்பது என்பது வெறும் கனவாக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் இதுபோன்ற அழகான மைதானத்தை உருவாக்க எங்களிடம் அபோதாத் நல்ல இடமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.