இசான் செஞ்சது நேர்மையானதே கிடையாது.. ரிக்கி பாண்டிங் சொல்றதுதான் சரி – சேவாக் விமர்சனம்

0
643
Sehwag

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் நடுவர் அவுட் தருவதற்கு முன்பாகவே வெளியேறி சென்றது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அணி மிகவும் சிக்கலான நிலையில் இருந்த போது இஷான் கிஷான் நடுவர் அவுட் தருவதற்கு முன்பாகவே வெளியேறி சென்றது பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

இஷான் கிஷான் செய்தது நியாயமா?

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மணிக்கு எதிராக இஷான் கிஷான் சதம் அடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு 7 போட்டிகள் மோசமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக அவருடைய அணியும் பெரிய அளவில் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பின்தங்கி இருக்கிறது.

இப்படியான நிலையில் நேற்று ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த நிலையில் இஷான் கிஷான் உள்ளே வந்தார். அப்போது தீபக் சகர் பந்துவீச்சில் பந்தை பின்புறமாக விளையாட முயற்சி செய்ய பந்து விக்கெட் கீப்பர் கைகளில் பிடிபட்டது. நடுவர் அந்த நேரத்தில் வைடு கொடுப்பதற்கு கையை காட்ட சென்றார். இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஷான் கிஷான் வெளியேறிவிட்டார். இதைப் பார்த்த நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் ரீப்ளேவில் பார்க்கும் பொழுது அது அவுட் இல்லை என தெரிந்தது. எதிரணிக்கு ரிவ்யூ இருக்கும் காலகட்டத்தில் இஷான் கிஷான் செய்தது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது என்ன நேர்மை?

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “பல சமயங்களில் அப்படியான நேரத்தில் மனம் வேலை செய்ய தவறுகிறது. நீங்கள் அப்படியான நேரத்தில் குறைந்தபட்சம் நடுவர் முடிவை அறிவிக்கும் வரை காத்திருங்கள். நடுவரும் தான் வேலை செய்வதற்கு பணம் வாங்குகிறார். அவரும் தன்னுடைய வேலையை செய்யட்டும்”

இதையும் படிங்க : இப்பவும் தோனி வழிதான்.. நான் அதை நம்புவதே கிடையாது.. நினைத்ததுதான் நடக்குது – ஹர்திக் பாண்டியா பேட்டி

“இந்த நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை எட்ஜ் எடுத்திருந்தால், அப்போது வெளியேறி இருப்பது விளையாட்டு உத்வேகமாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் கிடையாது. நடுவருக்கும் அந்த நேரத்தில் அது உறுதியாக தெரியவில்லை. அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் வெளியேறி விட்டீர்கள். ரிக்கி பாண்டிங் இது பற்றி எப்பொழுதும் என்ன சொல்வார் என்றால் ‘ என்னுடைய வேலை பேட்டிங் செய்வது; நடுவருடைய வேலை அவுட்டா இல்லையா என்று தீர்மானிப்பது’ என்பார். எனவே அதை நடுவர் கையிலேயே விட்டுவிட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -