எல்லா சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து நடிச்சா படம் ஓடிடுமா?.. ரோகித் இஷான் என்ன செஞ்சாங்க – சேவாக் விமர்சனம்

0
693
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். ஆனால் அந்த அணியில் பும்ரா தவிர மற்றவர்களின் செயல்பாடு பெரிதளவில் இல்லை. ஆனால் வீரேந்திர சேவாக் தற்பொழுது ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மீது விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷான் இருவரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமான முறையில் பேட்டிங்கில் செயல்பட்டு இருக்கிறார்கள். இஷான் கிஷான் பவர் பிளேவை தாண்டி விளையாடுவதே பெரிய காரியமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்தார். ஆரம்பத்தில் வந்த அந்த போட்டிக்குப் பிறகு, அவர் தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பிக் கொண்டே வருகிறார். மேலும் ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட 600 ரன்கள் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ஒரு அணி நல்ல நிலையை ஏற்றுவதற்கு துவக்க ஆட்டக்காரர்களிடமிருந்து சராசரியான பேட்டிங் செயல்பாடு ஆவது கிடைப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றில் இருப்பது மிகவும் கடினம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தற்போது அதுதான் நடந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “ஷாருக்கான், ஆமீர்கான், சல்மான் கான் இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் சேர்ந்து நடித்தால் மட்டும் படம் ஓடிவிடும் என்பதற்கான உத்தரவாதம் இருக்கிறதா? படம் ஓட வேண்டும் என்றால் நல்ல ஸ்கிரிப்ட் வேண்டும். படத்தை நல்ல முறையில் இயக்க வேண்டும். இதே போலத்தான் அணியில் பெரிய பெயர்கள் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் விளையாட வேண்டும். ரோகித் சர்மா ஒரு சதம் அடித்தார். அதற்குப் பிறகு அவர் பேட்டிங்கில் என்ன செய்திருக்கிறார்?

இதையும் படிங்க : விராட் கோலி இமயமலை துறவி மாதிரி.. அவர் 15வது கியரில் இருக்கிறார்.. இதுதான் காரணம் – முகமது கைஃப் பேச்சு

இஷான் கிஷான் இந்த சீசன் முழுவதும் விளையாடியிருக்கிறார். ஆனால் அவரால் பவர் பிளேவை தாண்டி நீடிக்க முடியவில்லை. தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கும் பெயர்களில் முதல் இரண்டு இடங்களில் பும்ரா மற்றும் சூரியகுமார் தான் இருக்கிறார்கள். மூன்றாவது நான்காவது இடத்திற்கு உத்தரவாதமான பெயர்கள் இல்லை. அவர்கள் யார்? என்று பிறகு பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -