சரியா 17 வருடம்.. இதே நாள், இதே மாதம், இதே மைதானம்.. விராட் கோலிக்கு நடந்துள்ள வினோத அரிய நிகழ்வு.. RCB vs PBKS

0
249

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 34 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

இதில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் அதன் தொடக்க வீரர் விராட் கோலிக்கு ஒரு வினோத நிகழ்வு நடந்துள்ளது.

- Advertisement -

ஒரு ரன்னில் விராட் கோலி அவுட்

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 34 ஆவது போட்டியில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆறு ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் நக்களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் வீசிய நிலையில் முதல் பந்தை பவுண்டரியுடன் அடித்து இன்னிங்ஸ் ஆரம்பித்த பில் சால்ட் அவரது நான்காவது பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு மூன்றாவது ஓவரில் தான் விராட் கோலி தனது முதல் பந்தையே எதிர்கொண்டார்.

- Advertisement -

விராட் கோலிக்கு நடந்துள்ள வினோத நிகழ்வு

தனது இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்த விராட் கோலி அர்ஸ்தீப் சிங் வீசிய 4வது பந்தில் விராட் கோலி தூக்கி அடிக்க முயற்சித்து மார்க்கோ ஜான்சனின் அற்புதமான கேட்ச் ஆல் வெளியேறினார்.1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறியதன் விளைவாக விராட் கோலிக்கு ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னதாக இதே நாள், இதே மாதம், இதே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தனது முதல் போட்டியை விளையாடிய விராட் கோலி அதில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க:மழையால் பாதிக்கப்பட்ட ஆர்சிபி – பஞ்சாப் போட்டி.. எப்போது தொடங்கும்? எத்தனை ஓவர்களாக குறைக்கப்படும்?. வெளியான அப்டேட்

அதற்குப் பிறகு 17 வருடம் கழித்து மீண்டும் இன்றைய நாளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். சற்று முன்பு வரை பெங்களூர் அணி 8.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆர்சிபி வீரர்கள் தடுமாறி வருகிறார்கள்.

- Advertisement -