18வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் போட்டி நடைபெறுமா? அல்லது நடைபெறாதா? என்பது குறித்து பார்க்கலாம்.
மழையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் ஆர்சிபி ஆட்டம்
நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் வலுவான இரண்டு அணிகளான ராயல் சிலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. 7 மணிக்கு டாஸ் போட்டு இருக்க வேண்டிய சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டு டாஸ் போட நேரம் தாமதம் ஆகி வருகிறது.
8:30 மணிக்கு முன்னதாக கனமழை பெய்த நிலையில் தற்போது லேசான தூறல் மழை பெய்து வருவதாகவும், போட்டி குறித்த அடுத்த முக்கிய தகவல் இன்னும் சில மணித்துளிகளில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மழையானது தொடர்ந்து பெய்தால் ஓவர்கள் எப்படி குறைக்கப்படும் அல்லது எந்த நேரத்தில் போட்டி முழுவதுமாக கைவிடப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
எத்தனை ஓவர்களாக மாற்றப்படும்
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி ஒருவேளை 9 மணிக்கு தொடங்கினால் போட்டியானது ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவராக மாற்றப்படும். ஒருவேளை 9.15 மணிக்கு தொடங்கினால் மேலும் ஒரு குறைக்கப்பட்டு போட்டியானது 17-18 ஓவர்களாக மாற்றப்பட்டு நடைபெறும். ஒருவேளை போட்டியானது 9.45 க்கு தொடங்கினால் 12 முதல் 14 ஓவராக மாற்றப்பட்டு நடைபெறும் வாய்ப்பு உள்ளது. 10 மணிக்கு 11 ஓவர்களாகவும், அதுவே 10.30 மணிக்கு 6 முதல் 7 ஓவர்களாக குறிக்கப்பட்டு நடைபெறும்.
இதையும் படிங்க:பட்டிதார் மற்ற கேப்டன்கள் மாதிரி பண்ண மாட்டார்.. இந்த விஷயத்துல அவர் தனியா நிப்பாரு – ஆர்சிபி வீரர் புவனேஸ்வர் குமார்
ஒருவேளை மழையானது தொடர்ந்து பெய்தால் 10.45க்கு போட்டியானது 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெறும். அந்த சமயத்திலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்தால் 10.50 க்கு போட்டி ஒருமனதாக கைவிடப்படும். எனவே லேசான தூரல் மழை பெய்து வரும் நிலையில் போட்டியானது எப்போது தொடங்கும் எத்தனை ஓவராக குறைக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போதைய ஐபிஎல் புள்ளி பட்டியலில் இரண்டு அணிகளும் வலுவான நிலையில் இருக்கின்றன. ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி நான்கு வெற்றிகளை பற்றி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும், அதே ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணி 4வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது