இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து கடந்த மாதத்தில் இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சில பரபரப்பான கருத்துக்களை கூறியிருந்தார். அவருடைய கூற்றை பொய்யாக்கும் விதமாக தற்பொழுது சென்னையில் ரசிகர்களுக்கு விராட் கோலி நெகிழ்ச்சியான செயலை செய்திருக்கிறார்.
தற்போது விராட் கோலி இரண்டு போட்டிகள் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடக்க இருப்பதால், நேற்று சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அமித் மிஸ்ராவின் குற்றச்சாட்டு
அமித் மிஸ்ரா கடந்த மாதத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். அதில் ரோகித் சர்மா குறித்து கூறும்பொழுது ரோகித் சர்மா கொஞ்சம் கூட மாறவில்லை என்றும் அவர் கிண்டல் செய்வது போல நாமும் அவர்களை கிண்டல் செய்து பேச அனுமதிப்பார் எனவும் கூறியிருந்தார்.
அதே சமயத்தில் விராட் கோலி ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை என்றும், பணம், பதவி, புகழ் வந்ததும் அவர் மாறிவிட்டார் என்றும் கூறியிருந்தார். எனவே விராட் கோலி உடன் தான் பேசுவதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டதாக கூறியிருந்தார். அமித் மிஸ்ராவின் இந்த கருத்து அப்போது சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
சென்னையில் உடைந்த அமித் மிஸ்ரா குற்றச்சாட்டு
இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர் தௌஷீப் அகமத் என்பவர் தன்னுடனும் தன் நண்பர்களுடனும் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என விராட் கோலிக்கு கோரிக்க வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஞாபகத்தில் வைத்திருந்த விராட் கோலி சென்னையில் அவர்களைச் சந்தித்ததுதான் தற்பொழுது வைரலாகி வருகிறது.
விராட் கோலி அவர்களை ஞாபகம் வைத்து அழைத்தது மட்டும் இல்லாமல், அவர்களை வெளியில் நிறுத்தி அனுப்பி விடாமல், ஓய்வறைக்கு வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். மேலும் அவர்களிடம் ஏழு நிமிடங்கள் உரையாடி, குறிப்பிட்ட நபருடைய நண்பர்களுக்கு சில கிரிக்கெட் சார்ந்த அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 22 பேர்.. இதுவரை 2024ல் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்.. 9 இந்திய பிளேயர்ஸ்
இதுகுறித்து தௌஷீப் அகமத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இது குறித்து தெரிவிக்கும் போது “நாங்கள் விராட் கோலி உடன் மிகச்சிறந்த ஏழு நிமிட உரையாடலை நடத்தினோம். அவரிடம் 0% ஆட்டிடியூடை கூட பார்க்க முடியவில்லை” என்று விராட் கோலி மிகவும் தன்மையாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி மீது அமித் மிஸ்ரா வைத்த குற்றச்சாட்டு உடைந்திருக்கிறது!