இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் காலம் பொற்காலம் என்று கூறலாம். இதில் தோனி உடன் விராட் கோலி நட்சத்திர வீரராக உயர்ந்த பிறகு சேர்ந்து விளையாடிய காலங்கள் அதைவிட மதிப்பு வாய்ந்தவை. இவர்கள் அமைத்த சில பாட்னர்ஷிப்புகள் மறக்க முடியாதவை. இந்த நினைவுகள் குறித்து விராட் கோலி நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
தற்போது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி இந்த இருவரும் சேர்ந்து விளையாடும் கடைசி போட்டியாகவும் அமைவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இரண்டு பெரிய இந்திய ஜாம்பவான்கள் மற்றும் சகோதரர்கள் போன்றவர்கள் என்பதால் உணர்வுபூர்வமாக அமைகிறது.
தோனி குறித்து விராட் கோலி கூறும் பொழுது “இந்தியாவில் தோனி எந்த மைதானத்தில் விளையாடினாலும் அது ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். நானும் அவரும் சேர்ந்து விளையாடுகிறோம். இது எங்களுக்குள் கடைசி போட்டியாகவும் இருக்கலாம். யாருக்கும் தெரியாதுதான் ஆனால் இது சிறப்பு வாய்ந்தது.
மஹி பாயை பொறுத்தவரையில் மக்கள் எப்பொழுதும் சொல்வது ‘அவர் ஏன் ஆட்டத்தை கடைசி ஓவர் வரையில் கொண்டு செல்கிறார்’ என்பதுதான். ஆனால் அவர் இப்படி விளையாடி எத்தனையோ ஆட்டங்களை முடித்திருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கு மிக நன்றாக தெரியும். அதோடு ஆட்டத்தை அவரே நின்று முடிப்பார்.
எனக்கு இது தசை நினைவாகவே இருக்கிறது. அவர் கடைசி ஓவர் வரை மேட்ச் எடுத்துச் சென்றால், நிச்சயம் அந்த மேட்ச்சை முடித்து விடுவார். எதிரணிகள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் வகையில், போட்டியை கடைசி ஓவருக்கு எடுத்துச் சென்று முடிப்பது அவருடைய வழக்கமான ஒன்று.
இதையும் படிங்க : ஹர்திக் மொத்த பிரச்சனைக்கும் காரணம் இதுதான்.. பாவம் அவரால இந்த ஒரு விஷயத்தை தாங்க முடியல – கவாஸ்கர் பேச்சு
ஆனால் இதில் என்னுடைய மனநிலை வேறானது. டி20 போட்டியாக இருந்தால் 19ஆவது ஓவரில் முடிக்க வேண்டும், 50 ஓவர் போட்டியாக இருந்தால் 49 வது ஓவரில் முடிக்க வேண்டும் என்பது என்னுடைய சிந்தனை. ஆனால் அவர் என்னுடன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, அவருடைய சிந்தனை வேறாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.