இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் கேள்விகள் கேட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை பிசிசிஐ தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இதில் விராட் கோலி சுவாரசியமான கேள்வி ஒன்றை கம்பீரிடம் கேட்டிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் களத்தில் இருவருமே இரண்டு முறை மோதிக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக லக்னோ ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது இருவருக்கும் இடையில் நடைபெற்ற வாக்குவாதம் பெரிய அளவில் சென்று விரும்பத்தகாத வகையில் அமைந்தது.
பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
இந்திய அணியின் பேட்டிங் யூனிட் லீடராக விராட் கோலி இருக்க, பிசிசிஐ தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரைக் கொண்டு வந்தது. இது பல ரசிகர்களையும் தாண்டி முன்னாள் வீரர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இருவரும் எப்படி தங்களுக்குள் இருக்கும் பகைமையை மறந்து அணிக்காக நாட்டுக்காக சேர்வார்கள்? என்பது கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றது மே தனிப்பட்ட எந்த விஷயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க முடியாது என்றும், இருவருமே நாட்டுக்காகவும் 140 கோடி இந்திய மக்களுக்காகவும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடுபடுவோம் என்று கூறிவிட்டார். இந்த நிலையில் இருவரும் கலந்து கொண்டுள்ள கேள்வி பதில் நிகழ்ச்சி தற்பொழுது பிசிசிஐ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
களத்தில் வாக்குவாதம் வந்தால் என்ன செய்வது?
இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கம்பீரிடம் ” நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அதிலிருந்து விலகி எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொழுது, நீங்கள் உங்களுடைய ஜோனில் இருந்து வெளியே கொண்டு வந்து விடும் ஆட்டம் இழந்து விடுவோம் என்று உணர்வீர்களா? அல்லது அது உங்களுக்கு அதிக உந்துதலை கொடுத்திருக்கிறதா? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கம்பீர் “என்னை விட உங்களுக்குத்தான் களத்தில் அதிகமாக வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு சிறப்பான பதிலை நீங்கள் தான் தர முடியும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : 16 மாதங்கள் 9 போட்டி.. இந்திய அணியை பார்த்தாலே.. அந்த விஷயம் முடிவுக்கு வருவது தெரியும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி
இந்த எதிர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்த விராட் கோலி “இந்த கேள்விக்கு நான் சொல்லும் பதிலை ஏற்றுக் கொள்பவர்களை தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். இதை இப்படித்தான் நடக்கும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.