16 மாதங்கள் 9 போட்டி.. இந்திய அணியை பார்த்தாலே.. அந்த விஷயம் முடிவுக்கு வருவது தெரியும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
12
Aakash

இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் சில ஆண்டுகள் போட்டி அட்டவணைகளை காட்டி ஒரு நாள் கிரிக்கெட் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து நாட்கள் போட்டியான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடம் இருக்கும் ஆர்வம் கூட ஒருநாள் போட்டிக்கு இல்லை. இதன் காரணமாக ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விதிகளில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி தொடர்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறது.

- Advertisement -

16 மாதங்கள் 9 போட்டி மட்டுமே

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஒருநாள் கிரிக்கெட் இனி சர்வதேச கிரிக்கெட்டின் மையமாக இருக்காது. 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2024 சாம்பியன்ஸ் டிராபி இரண்டுக்கும் இடைவெளியில் பார்த்தால் இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட வில்லை. தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாட போகிறோம்”

“அதாவது 16 மாதங்களில் நாம் ஒன்பது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறோம். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆண்டில் 15 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. ஆனால் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. சர்வதேச கிரிக்கெட்டில் அட்டவணை டி20 கிரிக்கெட்டை மையமாக எடுக்க ஆரம்பித்து இருக்கிறது”

- Advertisement -

ஏதோ பிரச்சனை இருப்பது உண்மை

மேலும் அவர் கூறும் பொழுது “50 ஓவர் கிரிக்கெட்டுக்குகான வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. அதைக் காப்பாற்றுவதற்கு எத்தனை முறை மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிர்வாகிகள்மீண்டும் மீண்டும் விதிகளை மாற்றினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஸ்ரத்தன்மை மற்றும் டி20 கிரிக்கெட்டின் இயல்பான உற்சாகம் எதிராக ஒருநாள் கிரிக்கெட் காப்பாற்றுவதற்கு போராட வேண்டியதாக இருக்கிறது”

இதையும் படிங்க :

“ஏதேனும் ஒன்றில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என அர்த்தம். உடையாத ஒன்றை நீங்கள் சரி செய்ய போவது கிடையாது. ஒருநாள் கிரிக்கெட்டை தக்க வைப்பதற்கு இன்னும் பொருத்தமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -