வீடியோ.. வாட்டர் பாயாக மாறிய விராட் கோலி.. களத்தில் செய்த சம்பவம்.. ஆசிய கோப்பையில் சுவாரசியம்!

0
946

தற்பொழுது ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் தங்களின் இரண்டாவது சுற்றுக் கடைசிப் போட்டியை விளையாடி வருகின்றன!

இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை வென்று, இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெற்றுவிட்டது. அதேசமயத்தில் பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இன்றைய போட்டி ஆசியக் கோப்பை தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

- Advertisement -

இந்த காரணத்தினால் இன்றைய இந்திய அணியில் 5 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் என ஐந்து வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வு கொடுக்கப்பட்ட இந்த ஐந்து வீரர்களுக்கு பதிலாக சர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, சூரியகுமார் ஆகியோர் இடம் பெற, திலக் வர்மா முதல்முறையாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு பெற்று அறிமுகம் ஆனார்.

மேலும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் இந்த தொடர் முழுக்க இந்திய அணி முதலில் பந்துவீசி இரண்டாவதாக பேட்டிங் செய்யவில்லை. அந்த அனுபவத்திற்காக இந்த போட்டியை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு தரப்படாது என்று பல முன்னாள் வீரர்களும் கூறி வந்தார்கள். ஏனென்றால் அவருடைய உடல் தகுதிக்கு ஓய்வு தேவைப்படாது, அவர் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பது அணிக்கு நல்லது என்று கூறப்பட்டது.

ஆனால் இந்திய அணி நிர்வாகம் வேறு மாதிரியாக யோசித்து, சூரியகுமார் மற்றும் திலக் வர்மா இருவரையும் ஒரே நேரத்தில் பேட்டிங் யூனிட்டில் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது அக்சர் படேலுக்கு பதிலாக, திலக் வர்மாவை இந்திய உலகக்கோப்பை அணியில் கொண்டுவர முடியுமா? என்று இந்திய அணி நிர்வாகம் யோசிக்கிறது. எனவே விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வு அளிக்கப்பட்டாலும் விராட் கோலி வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வேலையைச் செய்யும் பொறுப்பை எடுத்திருக்கிறார். மேலும் இதன் மூலம் அவர் மாற்று வீரராக உள்ளே வந்து பீல்டிங் செய்யவும் முடியும். இப்படி வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பொழுது, விராட் கோலி ஓடி வந்தது சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது. தற்பொழுது இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.