வீடியோ “என் மகன் விராட் கூட விளையாடறது பாக்கியம்” – வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் தாய் கண்ணீர்!

0
1770
Viratkohli

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

தற்போது இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 26 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 121 ரன்கள் விராட் கோலி எடுத்துக் கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் சேர்த்தது.

இந்திய அளவில் நான்காவது வீரராக 500 வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் சதம் அடித்து 500 ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

விராட் கோலிக்கு இந்த சதம் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இருபத்தி ஒன்பதாவது சதமாகவும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 76 ஆவது சதமாகவும் பதிவாகி இருக்கிறது. மேலும் வெளிநாட்டு மண்ணில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்து, அது குறித்தான சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்யும்பொழுது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா அவருடன் தொடர்ந்து நல்ல முறையில் உரையாடிக் கொண்டே இருந்தார். விராட் கோலியின் மிகப்பெரிய விசிறி அவர் என்று தெரியவந்தது.

இந்த நிலையில் விராட் கோலி விளையாடும்போது தன் தாய் வந்திருப்பதாகவும், அது தான் விளையாடுவதை பார்க்க வரவில்லை என்றும், விராட் கோலி விளையாடுவதை பார்க்க வந்திருப்பதாகவும், அவர் விராட் கோலி இடம் கூறிக் கொண்டிருந்தார். இது நேற்று சமூக வலைதளங்களில் வைரலான ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு நடைபெற்றது. அது மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாகவும் இருந்தது. விராட் கோலியை சந்தித்த பின்பு அவரது தாய் சந்தோசத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் துடைத்துக் கொள்ளும் அளவுக்கு நிகழ்வு இதயத்திற்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து ஜோசுவா டா சில்வா தாய் கூறும் பொழுது ” நானும் ஜோசுவாவும் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர்கள். விராட் கோலி எப்போதும் சிறந்தவர்களில் ஒருவர். அவரை இந்த மண்ணில் நாங்கள் பார்க்கப் பெற்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். விராட் கோலியுடன் இந்த டெஸ்டில் எனது மகன் விளையாடியது அவன் செய்த பாக்கியம்!” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்!