கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

வீடியோ; அஷ்வின் அமைதியாக வாங்கிய வைட் சதத்துக்கு சமம்; இந்திய ரசிகர்கள் பாராட்டு புகழ்ச்சி!

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் நடந்து முடிந்த போட்டி என்பது பல திருப்பங்களைக் கொண்டு முடிந்ததோடு, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாகவும் அமைந்திருந்தது!

- Advertisement -

இந்திய அணியில் இன்றைய போட்டியில் லெக் ஸ்பின்னர் சாகலுக்குப் பதிலாக ஆப் ஸ்பின்னர் அஸ்வின் இடம் பெற்றார். இன்றைய போட்டியில் அவர் 3 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அவர் பீல்டிங்கில் அரை சதம் அடித்த ஷான் மசூத் கேட்சை தவறவிட்டார். அதேபோல் அவரது பந்து வீச்சிலும் ஒரு கேட்சை தவற விட்டார். மேலும் இன்று அவருக்கு விக்கெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இன்றைய ஆட்டத்தில் அவருக்கு ஒரு பகுதி சிறப்பாக அமையாது இருந்தபொழுது, ஒரு பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடியான நேரத்தில் பேட் செய்ய வேண்டிய பொறுப்பு வந்தது.

- Advertisement -

சாதாரண போட்டி என்றாலும் பரவாயில்லை, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி ; அதுவும் உலகக் கோப்பை போட்டி. அழுத்தமும் நெருக்கடியும் டன் கணக்கில் இருக்கும்.

இப்படியான நிலையில் களத்திற்கு வந்த அஷ்வின் நவாஸ் வீசிய பந்தை மிக அமைதியாகப் புத்திசாலித்தனத்தோடு நகர்ந்து அகலப் பந்தாக மாற்றி அணிக்கு ஒரு ரன் வாங்கித் தந்தார். இதனால் ஒரு பந்து ஒரு ரன் என்ற நிலை உருவானது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான வீரர்கள் உள் வட்டத்திற்குள் வந்து விட்டார்கள். இந்த நேரத்தில் கடைசி பந்தை சமயோசிதமாக உள் வட்டத்தைத் தாண்டி தூக்கி அடித்து ஒரு ரன் எடுத்து தந்து அணியை வெற்றிபெற வைத்தார் அஷ்வின்.

அவர் எடுத்து தந்தது ஒரு ரன் என்றாலும், அது இப்படியான உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன், அணியின் வெற்றியை முடிவு செய்யும் ஒரு ரன் எனும் பொழுது நிச்சயம் ஒரு சதத்திற்கு சமம் என்று கூறலாம். அவர் மிகவும் நிதானமாக அதே சமயத்தில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டதை பார்க்கும் பொழுது, அவர் ஆட்டத்தில் எவ்வளவு விழிப்புணர்வு கொண்டவராக இருக்கிறார் என்று தெரிகிறது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

Published by