வீடியோ.. 6,6,6.. 17 ரன் 5 பந்தில் தேவை.. ரிங்கு சிங் சூப்பர் ஓவரில் மீண்டும் மாஸ் ஃபினிஷிங்.. ஐபிஎல்-ல் செஞ்ச அதே மேஜிக்.!

0
5450

2008 ஆம் ஆண்டு பிசிசிஐ நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் என்ற டி20 தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் தொடரின் வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதோடு பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.

இந்தத் தொடர்களின் காரணமாக இளம் தலைமுறை வீரர்கள் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதோடு சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அவர்களிடமிருந்து அனுபவங்களை கற்றுக் கொள்ளவும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இதன் காரணமாக இளம் வீரர்களுக்கு நல்ல விளையாட்டு அனுப்பவும் மற்றும் ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் அபார வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்களும் ஐபிஎல் தொடரின் அடிப்படையிலேயே டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் கர்நாடக மாநிலத்தில் நடத்தப்படும் மகாராஜா லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவை. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன . தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . இந்த லீப் போட்டிகளில் ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. 33 போட்டிகளை கொண்ட இந்தத் தொடரானது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது

அனைத்துப் போட்டிகளும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீரட் மார்வலஸ் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய காசி ருத்ராஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது . அந்த அணியின் கரன் ஷர்மா 58 ரண்களும் பிரியங் பன்சால் 57 ரன்களும் எடுத்தனர் . இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மீரட் மார்வலஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது

மீரட் மார்வலஸ் அணியின் வீரரான மாதவ் கௌஷிக் ஆட்டம் இழக்காமல் 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒன்பது போண்டறிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். மீரட் மார்வலஸ் அணிக்காக விளையாடிய ஐபிஎல் நட்சத்திரம் ரிங்கு சிங் 22 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கோட்டி டிராவில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் முறையில் போட்டியின் முடிவை நிர்ணயம் செய்வதற்காக இரண்டு அணிகளும் மீண்டும் மோதின.

- Advertisement -

சூப்பர் ஓவரில் மீரட் மார்வலஸ் அணிக்காக யோகேந்திர தொய்லா சூப்பர் ஓவரில் பந்து வீசினார். காசிருத்ராஸ் அணிக்காக விளையாடிய கரன் ஷர்மா ஐந்து பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த முகமது சரிம் தான் சந்தித்த முதல் பந்திலேயே 6 எடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓவரில் காசி அணி பதினாறு ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சூப்பர் ஓவருக்கு விளையாட வந்தது மீரட் மார்வலஸ் அணி. அந்த அணிக்கு துவக்க வீரர்களாக கொல்கத்தாநைட் ரைடர்ஸ் அணியின் ஃபினிஷர் ரிங்கு சிங் மற்றும் திவ்யனேஷ் ஜோஷி ஆகியோர் விளையாட வந்தனர். காசி அணிக்காக சிவா சிங் பந்து வீசினார். முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மிகவும் மெதுவாக ஆடிய ரிங்கு சிங் சூப்பர் ஓவரின் முதல் பந்தை மிஸ் செய்த போதும் அதற்கு அடுத்த மூன்று பந்துகளையும் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து தனது அணியை சூப்பர் ஓவரில் வெற்றி பெறச் செய்தார். இதேபோன்று நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 சிக்ஸர்கள் தொடர்ச்சியாக அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் சூப்பர் ஓவர் வீடியோ பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.