கம்பீர் இல்லை.. கேகேஆர் சாதிக்க காரணமான யாருமே பேசாத இந்திய முன்னாள் வீரர்.. வருண் வெங்கடேஷ் உருக்கம்

0
1240

17 வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி மற்றும் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகியோர் மட்டுமில்லாமல் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இன்னொரு இந்திய முன்னாள் வீரரின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணி வீரர்களின் அபார பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் மிக விரைவிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் கம்மின்ஸ் மட்டும் ஓரளவு போராடி 24 ரன்கள் குவித்தார். பந்துவீச்சை பொறுத்தவரை கொல்கத்தா அணியினர் அனைவருமே விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள். அதில் அதிகபட்சமாக ரசல் மட்டும் மூன்று விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி பத்து ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தத் தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கொல்கத்தா அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆலோசகர் கௌதம் கம்பீரின் சரியான திட்டமிடுதலும், வழிநடத்தலுமே மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சரியான அணுகுமுறை என்று அனைவரும் கூறி வரும் நிலையில் கொல்கத்தா அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயரும் கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்து வருண் சக்கரவர்த்தி விரிவாக கூறும்பொழுது “கொல்கத்தா அணி அனைத்து வழிகளிலும் சிறப்பாக செயல்பட மற்றொரு முக்கிய காரணம் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆவார். அபிஷேக்கை நான் வாழ்த்த விரும்புகிறேன். கொல்கத்தாவின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம். அபிஷேக் நாயர் இந்த சீசன் முழுவதுமே அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து உள்ளார்.

இதையும் படிங்க:ஆரஞ்சு தொப்பியை வென்றால்.. ஐபிஎல் கோப்பையை வென்று விட முடியாது – அம்பதி ராயுடு மீண்டும் விமர்சனம்

கேமராவிற்கு பின்னால் அவரது உழைப்பு தெரியாததால் அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகைய ஹீரோக்களை பற்றி நாம் பேச வேண்டியது மிகவும் அவசியம்” என்று கூறியிருக்கிறார். இதை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த கொல்கத்தா அணி வீரர்கள் ஒப்புக்கொண்டார். அவரும் “அபிஷேக் நாயர் மிகவும் உதவிகரமாக இருந்தார் போட்டியின் போது அவரது ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -