கிரிக்கெட்டில் சாதிக்க வயது என்பது ஒரு தடையே கிடையாது என்பதை 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி நிருபித்திருக்கிறார். ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தமான சூரியவன்ஷி நேற்று குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெரும் சாதனையை படைத்தார்.
முதல் 17 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் பின் 35 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர், பிறகு அதிவேக சதம் அடித்த வீரர் டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் வைபவ் சூரிய வன்சிக்கு சொந்தமானது.
ஜாம்பவான் வீரர்கள் பாராட்டு:
வைபவ் சூரியவன்ஷியை பாராட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டின் அடுத்த மிகப்பெரிய நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், நாம் அடுத்த ஒரு சூப்பர் ஸ்டாரை பார்த்து விட்டோம். அவர் மிகப்பெரிய வீரராக வளர போகிறார் என்று பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் 14 வயது வீரரான சூரியவன்சிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என் பீகாரத்தைச் சேர்ந்த வைபவுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். ஐபிஎல் தொடரில் சதம் அடித்த இனம் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறீர்கள்.
ரூ.10 லட்சம் பரிசு:
பிகாரிலிருந்து நீங்கள் சாதித்துள்ளதை பாராட்டி உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசை மாநில அரசு சார்பாக அறிவிக்கின்றேன். விரைவில் நீங்கள் இந்திய அணியில் இடம் பிடித்து பல்வேறு சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தாம் உங்களை வாழ்த்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரோகித் சர்மா மட்டுமல்ல.. 14 வயது சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம்.. இங்கிலாந்துக்கு அழைத்து செல்ல பிசிசிஐ திட்டம்
நேற்று வைபவ் சூரியவம்ஷி அடித்த ரன்களில் 93 சதவீதம் பௌண்டரிகளில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 101 ரன்களில் அவர் 94 ரன்கள் பௌண்டரியிலே அடைத்திருக்கிறார். வெறும் ஏழு ரன்கள் மட்டும் தான் ஓடி அடித்துள்ளார். தற்போது புள்ளி பட்டியலில் பின்தங்கி இருந்த ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூரியவம்சியின் அதிரடியால் தற்போது புத்துணர்ச்சி பெற்று இருக்கிறது.