ரோகித் சர்மா மட்டுமல்ல.. 14 வயது சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம்.. இங்கிலாந்துக்கு அழைத்து செல்ல பிசிசிஐ திட்டம்

0
107

ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை  நிரூபித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி.

நேற்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இஷாந்த் சர்மா, முஹமது சிராஜ், ரஷீத் கான், பிரசித் கிருஷ்ணா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 35 பந்துகளில் சதம் விளாசினார்.இதில் குறிப்பாக கரீம் ஜன்னத் என்ற ஆப்கானிஸ்தான் வீரர்களின் எதிராக ஒரே ஓவரில் 30 ரன்கள் அவர் குவித்தார்.

- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணம்:

இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வைபவ்வை பாராட்டுகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் செல்ல உள்ளனர்.

அதேவேளையில் தற்போது இங்கிலாந்துக்கு இந்திய அண்டர் 19 அணியும் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கான அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்துக்கு சென்று ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அண்டர் 19 அணி விளையாடுகிறது.

- Advertisement -

சீனியர் அணியில் இடம்:

இதில் 17 வயது வீரரான சிஎஸ்கே வின் ஆயுஸ் மாத்ரே மற்றும் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவன்சி ஆகியோர் இந்த அணியில் இடம் பெறப் போகிறார்கள்.அடுத்த ஜனவரி மாதம் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் அண்டர் 19 உலககோப்பை தொடர் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: நேத்து காலையில சூரியவன்சி கிட்ட பேசறப்ப.. ஒரே ஒரு சேஞ்ச் சொன்னேன் சதம் வந்துடுச்சு – கோச் பேட்டி

இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து தொடர் இருக்கும். இதில் ஆயுஷ் மாத்ரே மற்றும் சூரியவன்சி ஆகியோரை அனுப்ப பிசிசிஐ முடிவு எடுத்திருக்கிறது. இந்த இரண்டு வீரர்களும் அண்டர் 19 தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தால், அவர்களை சீனியர் அணியிலும் விரைவாக கொண்டு செல்லலாம் என்ற திட்டத்தில் அஜித் அகார்கர் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -