உத்தரப்பிரதேஷ் மாநில அணிக்காக விளையாடும் பந்துவீச்சாளர் ஷிவா சிங் ருதுராஜ் பேட்டிங் செய்த விதத்தின் காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகி விடலாம் என்று நினைத்ததாக கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் திறமையான இளம் வீரர்களில் முக்கியமானவராக ருதுராஜ் இருக்கிறார். இருந்த போதிலும் கூட அவருக்கு இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் இடம் இல்லாமல் வெளியில் வைக்கப்பட்டு இருக்கிறார். இப்படியான நிலையில் அவருடைய அதிரடியான பேட்டி காரணமாக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்ததாக ஷிவா சிங் கூறியிருக்கிறார்.
உலகச் சாதனை போட்டி
2022 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே காலிறுதிப் போட்டியில் உத்திர பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்ராஜ் மிகச்சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
மேலும் இந்த போட்டியில் ஷிவா சிங் பந்துவீச்சில் தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் அடித்தார். ஐந்தாவது பந்தை அவர் நோ-பாலாக வீச அதையும் சிக்சர் அடித்தார். இதைத்தொடர்ந்து மேலும் இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இதன் காரணமாக ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்த முதல் பேட்மேன் என்கின்ற உலகச் சாதனையை படைத்தார். அத்தோடு அந்த ஓவரில் 43 ரன்கள் வர, ஒரு ஓவரில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் சாதனையையும் படைத்தார்.
கிரிக்கெட்டை விட்டு விலக நினைத்தேன்
அந்தப் போட்டியில் ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விட்டு தந்து தன்னுடைய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த ஷிவா சிங் ருதுராஜின் அதிரடி பேட்டிங் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எப்படியான மோசமான தாக்கத்தை உருவாக்கியது என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ஷிவா சிங் கூறும் பொழுது “நான் அந்த போட்டியில் ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்தேன். தொடர்ந்து என்னால் போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த நேரத்தில் என்னை நிறைய பேர் தொடர்பு கொண்டார்கள். ஆனால் நான் கிரிக்கெட்டை விட்டு விலகலாம் என்று நினைத்தேன். அதே சமயம் எதிர்காலத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை?”
இதையும் படிங்க : இஷாந்த் ஜடேஜா சண்டை.. ஆஸிக்கு நடுநிலைமை சரிவராது.. 2018ல அந்த சம்பவத்துல புரிஞ்சது – ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட தகவல்
“அதாவது அந்த நேரத்தில் மக்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. எனக்கு அவர்களிடம் ஒரு வார்த்தை பேசுவது கூட மிகவும் கடினமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் எல்லோரும் எனக்கு ஸ்டூவர்ட் பிராடை உதாரணமாக காட்டினார்கள். இருந்த போதும் அப்பொழுது அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.