இஷாந்த் ஜடேஜா சண்டை.. ஆஸிக்கு நடுநிலைமை சரிவராது.. 2018ல அந்த சம்பவத்துல புரிஞ்சது – ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட தகவல்

0
78
Aakash

இந்திய அணி 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்த பொழுது மொத்த ஆஸ்திரேலியாவும் நடந்து கொண்ட விதம் தனக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுத்தது என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

அந்த குறிப்பிட்ட தொடரின் இரண்டாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது. அப்போது இந்திய வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தங்களுக்குள் மோதி கொண்டார்கள். அப்போது அவர்கள் பேசியதை போட்டியின் பிராட்காஸ்டர் ஆஸ்திரேலியா ஊடகம் சத்தத்தை அதிகப்படுத்தி எல்லோருக்கும் கேட்கும் படி வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா நடந்து கொண்ட விதம்

இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா காலத்தில் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை என அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ஆகாஷ் சோப்ரா மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் என அனைவரும் ஆப் த ஃபீல்டில் பேசி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கு ஆன் த பீல்டில் வந்த பொழுது, அந்தச் சம்பவத்தை வைத்து ரிக்கி பாண்டிங் இந்திய அணியை மிகவும் கடுமையான விமர்சனத்தை செய்திருக்கிறார். இதை பார்த்த ஆகாஷ் சோப்ரா மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு நடுநிலைமை சரிவராது

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “அப்போது களத்தில் இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா மோதிக்கொண்ட பொழுது ஒளிபரப்பாளர்கள் ஸ்டெம்ப் மைக்கின் சத்தத்தை கூட்டினார்கள். நாங்கள் இந்த விஷயம் குறித்து பெரிதாக பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லை என கிரிக்கெட் வர்ணனைக்கு வெளியில் பேசினோம்”

“இதற்கு அடுத்து நாங்கள் கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்பிய பொழுது, அப்பொழுது எங்களுடன் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ரிக்கி பாண்டிங் இந்த சம்பவத்தை வைத்து இந்திய அணியை கிழித்தெறிந்தார். சில நிமிடங்களுக்கு முன்னால் எனக்கு வெளியில் என்ன நடந்தது என்பதை யோசிக்கும் பொழுது அதிர்ச்சியாக இருந்தது. சில நிமிடங்களில் கிரிக்கெட் வர்ணனையில் வரும் பொழுது அவர்கள் வேறு மாதிரி நடந்து கொண்டார்கள்”

இதையும் படிங்க : டிராவிட் குரூப் வேறங்க.. கம்பீர் குரூப் அப்படியே இன்னொரு மாதிரி.. ரிலாக்ஸ் பண்ணல – ரோகித் சர்மா பேச்சு

“அடுத்து பெர்த் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, வண்டியில் சென்று கொண்டு இருந்த நான் செய்தித்தாளை பிரித்துப் பார்த்தேன்.அதில் இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா சண்டையை வைத்து இந்திய அணியில் சண்டை உள்ளது என தலைப்பு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடும் பொழுது மொத்த நாட்டுக்கு எதிராகவும் விளையாட வேண்டி இருப்பது புரிந்தது. மேலும் கிரிக்கெட் வர்ணனையில் ஆஸ்திரேலியாவில் நடுநிலையாக இருக்கக் கூடாது, இந்தியா அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -