இந்திய அணி இந்த ஆண்டில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பேட்டி அளித்திருக்கிறார்.
இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை வென்று நாடு திரும்பியது. இதன் காரணமாகவே தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சென்று விளையாட இருக்கும் டெஸ்ட் தொடருக்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆஸ்திரேலியா பக்கத்தில் உருவாகி இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியின் எழுச்சி
விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் முன்னேறி செயல்பட ஆரம்பித்தார்கள். இதைக் குறி வைத்து கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி வேலை செய்தார்கள். எனவே வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியை வெல்வதோடு மட்டும் இல்லாமல் டெஸ்ட் தொடரையும் வெல்லும் அணியாக இந்திய அணி உருவெடுத்தது.
இதன் காரணமாகவே இந்திய அணி கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடிந்தது. குறிப்பாக கடந்த முறை விராட் கோலி மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பியதும், முன்னணி நட்சத்திரங்கள் காயத்தால் ஒவ்வொரு போட்டியாக விலகிக் கொண்டே இருந்ததும் பெரிய பின்னாடி கொடுத்தது. ஆனாலும் இளம் வீரர்கள் கொண்ட அணியும் இறுதியாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற உதவியது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியர்களுக்கு பெரிய சந்தோசம்
இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கும் உஸ்மான் கவாஜா கூறும்பொழுது “கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்து வரும் அணிகளாக இருவருமே இருக்கிறோம். மேலும் கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டோம். இந்திய அணிக்கு எதிரான போட்டி எப்பொழுதும் பெரியதாக அமைகிறது.
இந்த விஷயத்தை நான் மரியாதைக்குரிய ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன். எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வந்திருக்கிறோம். மேலும் எங்களுக்கென ஒரு மரபும் பாரம்பரியமும்நற்பெயரும் இருக்கிறது.
இதையும் படிங்க : சத்தியமா சொல்றேன்.. இந்த இந்திய பையன்.. ஆல் டைம் கிரேட்டா டெஸ்ட் கிரிக்கெட்ல வருவாரு – சவுரவ் கங்குலி நம்பிக்கை
இப்போது இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது வழக்கமாக மாறி இருக்கிறது. ஐபிஎல் தொடர் எழுச்சிக்குப் பிறகு இது இது நடக்க தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு முறை அவர்கள் இங்கு வந்த பொழுது எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். மேலும் இந்தியாவுக்கு எதிராக நாங்களும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அவர்களிடத்தில் பெற்று வந்திருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.