பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி குறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி, அதில் ஒரு இளம் இந்திய வீரர்களை குறிப்பிட்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் கிரேட் ஆக வருவார் என்று கூறியிருக்கிறார்.
இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பிசிசிஐ தொலைநோக்காக சில தேர்வுகளை நேர்மையாக செய்திருக்கிறது.
16 பேர் கொண்ட அணி
பங்களாதேஷ் தொடருக்கு 15 பேர் கொண்ட அணியாக தேர்வு செய்யாமல் 16 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க முடிகிறது. இல்லையென்றால் சர்ப்ராஸ் கான் போன்ற ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
மேலும் முக்கியமாக ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டிருக்கிறார். இத்தோடு சர்பராஸ்கான் போல ஆகாஷ் தீப்புக்கு மறு வாய்ப்பு இந்திய அணியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒன்றரை வருடங்கள் கழித்து இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
ஆல் டைம் கிரேட்
இதுகுறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி கூறும் பொழுது “இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக நான் ரிஷப் பண்ட்டை கருதுகிறேன். அவர் இந்திய அணிக்கு திரும்பியதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவார்.அவர் இதேபோன்று செயல்பட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் கிரேட் ஆக மாறுவார். என்னை பொறுத்த வரையில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் குறுகிய கிரிக்கெட் வடிவத்திலும் அவர் சிறப்பான நிலைக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
காயம் காரணமாக முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் பொழுது அவர் தேர்வு செய்யப்படுவார். இப்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியிலும் நல்ல பந்துவீச்சு தாக்குதல் இருக்கிறது. சென்னையில் நல்ல பவுன்ஸ் இருக்கும். மேலும் நான்கு சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கும் பொழுது அதை எதிர்கொள்வது எளிதாக இருக்காது.
இதையும் படிங்க : 4 டெஸ்ட் 10 ஆண்டுகள்.. இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை.. நிஷாங்கா கிரேட் சதம்.. மாறும் சூழ்நிலை
ஆகாஷ் தீப் சிறந்த இளம் வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் நன்றாக ஓடி நல்ல வேகத்தில் பந்து வீசுவார்.மேலும் அவர் நீண்ட நேரம் பந்து வீசக் கூடியவர். அவர் பெங்கால் அணிக்காக விக்கெட்டுகள் கைப்பற்றியதை நான் பார்த்திருக்கிறேன். முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் போல அவர் வேகமாக 140 கிலோ மீட்டரில் வீசக்கூடியவர் கவனிக்கப்பட வேண்டியவர், என்று கூறி இருக்கிறார்.