“அதிகாலை 3 மணி வரை.. விராட் கோலி என்னிடம் மன்னிப்பு கேட்டார்” – எல்கர் மீண்டும் அதிரடி

0
488
Virat

தற்போதைய கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இருக்கும் புகழும் ஈர்ப்பும் வேறு எந்த வீரருக்கும் கிடையாது. அவர் களத்தில் இருந்தாலே மைதானம் வேறு விதமான ஆர்ப்பரிப்பில் இருக்கும்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி குடும்ப காரணங்களுக்காக விலகி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக தோற்றதும், களத்தில் விராட் கோலி இல்லாதது இந்திய வீரர்களை எவ்வளவு சோர்வாக வைத்திருந்தது என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பேசும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்தியா வந்திருந்த பொழுது, அந்த அணியின் டீன் எல்கருக்கும் விராட் கோலிக்கும் இடையே பெரிய வாய்த் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

விராட் கோலி தன்னை நோக்கி துப்பியதாகவும், அப்படி செய்தால் பேட்டால் அடித்து விடுவேன் என எல்கர் பதிலடி தந்ததாகவும், பின்பு இந்தியாவில் இருக்கிறோம் என்பதற்காக கொஞ்சம் சுதாரித்து பொறுமையாக இருந்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இதே சம்பவம் குறித்து டீன் எல்கர் மீண்டும் வேறொரு நிகழ்வை பேசி இருக்கிறார். 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்பொழுது விராட் கோலி ஏற்கனவே நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்பியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பேசி உள்ள டீன் ஏல்கர் “அந்தச் சம்பவம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி என்னிடம் வந்து ‘ நான் அந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நாம் இருவரும் சேர்ந்து மது அருந்தலாமா?’ எனக் கேட்டார். பின்பு நாங்கள் அதிகாலை மூன்று மணி வரை ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். அவர் அன்று மதுவை பயன்படுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “இப்ப சொல்றேன்.. எனக்கு விக்கெட் கிடைக்கும் முக்கிய காரணம் வேற” – ஹார்ட்லி பேட்டி

விராட் கோலி பொதுவாக களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் பின்பு களத்திற்கு வெளியே வீரர்களுடன் சகஜம் ஆகி விடுவார் என்று கூறப்படும். ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக் இடமும் இப்படி களத்திலேயே சமாதானமானதை பார்த்திருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.