என்கிட்ட பும்ரா பவுலிங் ஐடியா கேட்டார்.. ரோகித் என் பந்தை ஆட முடியல – பாக் வழி யுஏஇ பவுலர் பேட்டி

0
768
Bumrah

பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து யுஏஇ அணிக்காக ஆடும் ஜாகூர் கான் மும்பை இந்தியன்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த பொழுது பும்ரா தன்னிடம் பந்துவீச்சு ஆலோசனை கேட்டதாக கூறியிருக்கிறார்.

தற்போது 35 வயதான வேகப் பந்துவீச்சாளரான ஜாஹூர் கான் பின் நாட்களில் யுஏஇ அணிக்காக விளையாடி வருகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் பும்ரா பந்துவீச்சு ஆலோசனை கேட்டதாகவும், ரோஹித் சர்மா தன் பந்தில் தடுமாறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பவுலர்

தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரே ஒரு பவுலராக உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் பும்ரா மட்டுமே இருந்து வருகிறார். வடிவத்திற்கு வடிவம் தன் பந்துவீச்சை அவர் மாற்றிக் கொள்ளும் விதம் மிகவும் அபாரமான ஒன்று. மேலும் ஆடுகளத்தை முதல் ஓவரிலேயே கணிப்பதில் வல்லவர்.

அவருடைய பந்துவீச்சு திறன் மற்றும் பந்துவீச்சு அறிவு இரண்டும் அபாரமாக இருக்கிறது. இதன் காரணத்தால் தற்போது கிரிக்கெட் உலகில் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு தனித்தன்மை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இது போலவே பேட்டிங் டைமிங்கில் ரோஹித் சர்மா அளவுக்கு யாரும் இல்லை என்று சொல்லலாம். ஒரே நேரத்தில் அழகியலாகவும் அதிரடியாகவும் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா ஆலோசனை கேட்டார் ரோஹித் சர்மா தடுமாறினார்

இந்த நிலையில் ஜாஹூர் கான் கூறும் பொழுது “நான் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மூன்று மாதங்கள் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்திருக்கிறேன். அப்போது பும்ரா ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் அர்த்தம் மிக்க மிக அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். பும்ராவுக்குஎன்னை மிகவும் பிடித்திருந்தது”

“பும்ராவை என்னுடைய மெதுவான பந்துவீச்சு கவர்ந்திருந்தது. அவர் நான் அப்படியான பந்துகளை வீசுவதற்கு என்ன மாதிரி பந்தை கிரிப் செய்கிறேன் என்பது குறித்து என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அதேபோல யார்க்கர் பந்துகளை வீசுவது எப்படி என அவரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டேன். இந்த உலகில் புதிய பந்தில் யார்க்கர் வீசக்கூடியவர்கள் பும்ரா மற்றும் மலிங்க இருவர்தான் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : 9 விக்கெட்.. அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல் பவுலிங்.. உண்மையான யோக்ராஜ் சிங் வார்த்தை

“மேலும் என்னுடைய மெதுவான பந்தை ரோகித் சர்மாவால் சரியாக எடுத்து அடிக்க முடியவில்லை. அவர் என்னுடைய அந்தப் பந்தில் மிகவும் தடுமாற்றமாக உணர்ந்தார். மேலும் அவர் பந்தை எடுத்து அடித்தாலும் கூட சிக்ஸருக்கு அடிக்க முடியாது அவுட் ஆகி விடுவேன் என்று என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -