அந்த ஒரு வார்த்தை போதும்.. தோனி என்கிட்ட இத சொன்னதே பெரிய சாதனைதான் – தேஷ் பாண்டே பேட்டி

0
57

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழும் துஷார் தேஷ்பாண்டே இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அடுத்து நடைபெற உள்ள ஏலத்தில் சென்னை அணி இவரை திரும்பவும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அவரது தொடக்க காலம் குறித்து மகேந்திர சிங் தோனி தன்னிடம் கூறிய சில முக்கிய கருத்துகளை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான துஷார் தேஷ் பாண்டே அந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதற்குப் பிறகு 2023ம் ஆண்டு சென்னை அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக வெளியேற, அப்போது சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார். அந்த சீசனில் 16 போட்டிகள் விளையாடி 21கெட்டுகள் வீழ்த்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார்.

அதற்கு அடுத்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் இந்த சீசனிலும் தனது சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்தார். இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி ஒரு சர்வதேச அளவில் வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதாக சில முக்கிய கருத்துக்களை தோனி கூறியதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சர்வதேச அளவில் வெற்றி பெற உங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது. ஆனால் ஆடுகளத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம். மக்கள் கூட்டத்தால் எந்த வித கவனச் சிதறலும் ஏற்பட்டு விடக்கூடாது. ஆழமாக மூச்சு விடுங்கள். அமைதியாக இருந்து பந்து வீசத் தொடங்குங்கள். ஒரு சர்வதேச அளவில் வெற்றி பெறுவதற்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது என்று மகேந்திர சிங் தோனியே கூறும்போது அதுவே ஒரு சாதனை.

கடந்த 2023ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் எனது பந்து வீச்சு மோசமாக அமைந்தது. அப்போது தோனி தன்னிடம் வந்து நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நீங்கள் வீசியது அனைத்துமே நல்ல பந்துகள் தான். இன்று உங்களுடைய நாளாக அமையவில்லை அவ்வளவுதான். அடுத்த போட்டியில் இதே முறையில் வந்து வீச வேண்டும்” என மகேந்திரசிங் தோனி கூறினார் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியில் வாய்ப்பு.. ஷமி தந்த அந்த ஐடியாதான் எல்லாத்தையும் மாத்துச்சு – ஆகாஷ் தீப் பேட்டி

2023ஆம் ஆண்டு சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஒரு லீக் போட்டியில் தேஷ் பாண்டே 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் வீழ்த்தி 51 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதி போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 56 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.

- Advertisement -