கிரீனுக்கு நடந்தது எனக்கு தெரியாது.. திரும்பி வர அவருக்கு தெரியும் – இந்திய தரப்புக்கு ஹெட் சூசக பேச்சு

0
80
Head

கேமரூன் கிரீனுக்கு காயமடைந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், அவருக்கு எப்படி திரும்பி வரவேண்டும் என்று தெரியும் எனவும் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் கூறியிருக்கிறார்.

தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. தற்போது இந்த தொடரில் நடைபெற்றிருக்கும் நான்கு போட்டியில் தலா இரண்டு போட்டிகளை இரண்டு அணிகளும் வென்று தொடர் சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேமரூன் கிரீன் காயம்

நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் கேமரூன் கிரீன் இடம் பெறவில்லை. பிறகு அவருக்கு காயம் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பப்படுகிறார்.

கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கும் மிகவும் முக்கியமான வீரராக இருக்கிறார். அவர் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்பதை விட, டெஸ்ட் பேட்டிங் வரிசையில் முக்கியமான நான்காவது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவராக உருவெடுத்திருக்கிறார். இறுதியாக இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்தில் கடினமான சூழ்நிலையில் சதம் அடித்தார்.

- Advertisement -

கிரீனுக்கு திரும்பி வர தெரியும்

இந்த நிலையில் அடுத்து ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா திட்டங்களில் கேமரூன் கிரீன் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். அவர் மீண்டும் இந்த தொடருக்கு வர முடியுமா? என்பது இன்னும் தெரியவில்லை.

தற்போது கேமரூன் கிரீன் குறித்து பேசி இருக்கும் டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “கிரீன் தற்போது வீட்டிற்கு சென்றுவிட்டார். நான் விளையாடுவதற்கு பேருந்தில் ஏறிய பொழுதுதான் இதை கண்டுபிடித்தேன். இப்போது என்னுடைய மொபைல் எனக்கு கிடைத்திருக்கிறது. நான் அவரைத் தொடர்பு கொண்டு என்ன நடந்தது? என்று கேட்பேன்.ஆனாலும் இது வெளிப்படையாக ஏமாற்றமாக இருக்கிறது. இருந்த போதிலும் கூட அவர் திரும்பி வருவதற்கான வழியை அறிவார்”

இதையும் படிங்க : சர்பராஸ் கான் தம்பி முஷீர் கானுக்கு சாலை விபத்து.. உபியில் சிகிச்சை.. புதிய மருத்துவ அறிக்கை வெளியானது

“நான் இன்னும் கொஞ்சம் நிலை த்து விளையாடினால் நன்றாக இருக்கும். ஆனால் நான் தற்போது பந்தை நன்றாக அடிப்பதாக உணர்கிறேன். தற்போது அணியில் ஒரு சில வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லை. தனிப்பட்ட முறையில் ஓரிரு நாட்களுக்குள் களம் இறங்குவார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -