சர்பராஸ் கான் தம்பி முஷீர் கானுக்கு சாலை விபத்து.. உபியில் சிகிச்சை.. புதிய மருத்துவ அறிக்கை வெளியானது

0
169
Musheer

இந்திய அணி வீரர் சர்பராஸ் கானின் தம்பியான வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் முஷீர் கான் சாலை விபத்தில் உத்தர பிரதேசத்தில் சிக்கினார். இந்த நிலையில் சாலை விபத்து குறித்தும் தற்போது அவர் நிலை குறித்தும் அறிக்கை வெளியாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் தொடர்களில் இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் வாய்ப்பு பெற்றார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை அளிக்கும் வீரராகவும் வளர்ந்து வருகிறார். அவருக்கு இணையாக அவருடைய தம்பியான முஷீர் கான் எதிர்கால இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வேகமாக வளர்ந்து வரும் முஷீர் கான்

கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் தனது மாநில அணியான மும்பை அணிக்கு நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை ஐம்பதுக்கு மேற்பட்ட ரன்கள் அடித்து எல்லோருடைய கவனத்தையும் திருப்பினார். இந்த நிலையில் துலீப் டிராபியில் அறிமுக போட்டியில் சதம் அடித்தார்.

தற்போது தொடங்க இருக்கும் இரானி கோப்பைக்கான மும்பை அணியில் இடம் பிடித்தார். மேலும் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய ஏ அணியிலும் அவருக்கு முதல் முறையாக இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அவர் வெட்க கைப்பற்றும் அளவுக்கான இடது கை சுழல் பந்துவீச்சாளராகவும் இருப்பது அவருடைய முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

- Advertisement -

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து

இந்த நிலையில் இரானி கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக உத்திர பிரதேஷ் லக்னோ ஏகனா மைதானத்திற்கு குடும்பத்துடன் காரில் அசம்கரில் இருந்து முஷீர் கான் புறப்பட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து உள்ளாகி இருக்கிறது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் அவர் சுயநல உடன் இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : 2059 ரன்.. உடைக்க முடியாத ரிஸ்வானின் உலக சாதனையை உடைத்த பூரன்.. பின்னணியில் 18 போட்டிகள்

இந்த நிலையில் முஷீர் கான் உடல்நிலை பயணத்திற்கு தகுதியாக இருக்கிறது என மருத்துவர்கள் அறிவித்ததும், அவரை உடனடியாக உத்தர பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு கொண்டு வந்து முழு வேகத்தில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -