ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் ஆஸ்திரேலியா வீரராக இருந்தால் தங்கள் அணிக்கு சிறப்பாக இருக்கும் என கூறி இருக்கிறார்கள்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நவம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் வைத்து மோதிக்கொள்ள இருக்கின்றன. இதனால் இந்த தொடர் குறித்து நிறைய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கவனிக்கப்படும் இளம் இந்திய வீரர்கள்
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் மூன்று இந்திய இளம் வீரர்கள் கவனிக்கப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு உள்நாட்டில் வைத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார்.
அதே இங்கிலாந்து தொடரில் கில் மொத்தம் இரண்டு சதங்கள் அடித்து திரும்பி வந்தார். அணி நெருக்கடியாக இருந்த இரண்டு போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இவர்களுக்கு அடுத்து இரண்டு வருடம் கழித்து இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் தன்னுடைய வழக்கமான முறையில் அதிரடியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார்.
இவர் ஆஸ்திரேலியா வீரராக இருக்கலாம்
இந்த நிலையில் மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் ஒரு ஆஸ்திரேலியா வீரராக இருக்கலாம் என்று விரும்புகிறேன். ஏனென்றால் அவர் கடந்த சில ஆண்டில் நிறைய விஷயங்களை அனுபவித்தார். அவர் நரகத்திலிருந்து மீண்டு வந்தார். அவர் பாசிட்டிவான பையனாகவும் இன்னும் இளமையானவராகவும் இருக்கிறார்”
அவருக்கு எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. ரிஷப் பண்ட் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்தவர். எப்பொழுதும் சிரித்துக் கொண்டே நிதானமாக இருக்கும் ஆளுமை அவருக்கு வாய்த்திருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : என்னுடைய கோச்சிங் ஸ்டைல் இவர் மாதிரிதான்.. பணம் இல்லாதப்ப நிறைய உதவினார் – யுவராஜ் சிங் வெளியிட்ட தகவல்
ரிஷப் பண்ட் குறித்து டிராவிட் கூறும் பொழுது “அதிகமாக ஆஸ்திரேலிய வீரர் போல இருக்கும் வீரராக நான் ரிஷப் பண்ட்டை உணர்கிறேன். அவர் ஆக்ரோஷத்தன்மையுடன் இருப்பது அதே வழியில் தொடர்ந்து சென்று விளையாடுவது என அவருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.