சமித் டிராவிட் முன்பே.. இந்திய U19 அணியில் ஆடியுள்ள 3 இந்திய வீரர்களின் மகன்கள்.. தமிழக பிளேயருக்கும் இடம்

0
893

சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கு மிக முக்கிய படிகளில் ஒன்று அண்டர் 19 கிரிக்கெட் தொடர். 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அண்டர் 19 மிக முக்கிய தளமாக பார்க்கப்படுகிறது.

ராகுல் டிராவிட்டின் மகனான சமித் ட்ராவிட் தற்போது இந்திய அண்டர் 19 அணியில் விளையாட தயாராக இருக்கும் நிலையில் அவருக்கு முன்பாகவே முன்னாள் மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்களின் மகன்களும் இந்தியா அண்டர் 19 அணியில் விளையாடியிருக்கிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி, கேன் வில்லியம்சன், பாபர் ஆசம், டிம் சவுத்தி, ரோஹித் ஷர்மா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஆகிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த விளங்குவதற்கு அண்டர் 19 முக்கியத் தளமாக அமைந்திருக்கிறது. அண்டர் 19 கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அதில் வெற்றிகரமாக விளங்கி வருகிறது. இதில் முன்னாள் 3 இந்திய கிரிக்கெட் வீரர்களின் மகன்களும் இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடி இருக்கின்றனர்.

1.ஸ்டூவர்ட் பின்னி

- Advertisement -

தற்போதைய பிசிசிஐ தலைவர் ஆன ரோஜர் பின்னி 1980களில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர். 1983ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது மகனான ஸ்டூவர்ட் பின்னி 19 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ஆம் ஆண்டு இந்தியா அண்டர் 19 அணியில் விளையாடியிருக்கிறார். ஸ்டூவர்ட் பின்னி பேட்டிங்கில் 34 ரன்களையும் வலது கை பந்து வீச்சாளரான இவர் 6 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

2.யுவராஜ் சிங்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ் சிங் மகனான யுவராஜ் சிங் 2000ம் ஆண்டு 19 வயது உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி இருக்கிறார். அந்த முறை இந்தியா 19 உலக கோப்பையை வென்றது மூலம் தனது வருகையை உலகிற்கு அறிவித்தார். அதற்குப் பிறகு இந்திய அணியில் யுவராஜ் இடம் பிடித்து செய்த சாதனைகள் ஏராளம். 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இந்திய அணி இரண்டு முறை உலக கோப்பையை வென்ற போது அதில் யுவராஜ் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இதுக்காக நாங்க வெட்கப்படல.. இந்த 3 வேலைய சரியா செஞ்சா..இப்பவும் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கு – கில்லெஸ்பி பேட்டி

3.அனிருதா ஸ்ரீகாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் அனிருத் ஸ்ரீகாந்த் 2004- 2005ம் ஆண்டு இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இருப்பினும் இந்திய சீனியர் லெவல் அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்காக அனிருத் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -