இதுக்காக நாங்க வெட்கப்படல.. இந்த 3 வேலைய சரியா செஞ்சா..இப்பவும் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கு – கில்லெஸ்பி பேட்டி

0
66

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் வங்கதேசம் அணி நல்ல சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் அணியின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, அதற்குப் பின்னர் பாகிஸ்தான் 172 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதற்குப் பிறகு 184 ரன்கள் வெற்றி இலக்கோடு களம் இறங்கி விளையாடி வரும் வங்கதேச அணி தற்போது வரை விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் வங்கதேசம் 143 ரன்கள் குவித்தால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று விடும். எனவே பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கில்லஸ்பி இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாகக் கூறும்போது “சூழ்நிலைகளின் படி தற்போது வங்கதேச அணிக்கு சாதகமாக இருப்பது போல தெரியலாம். அதற்காக நாங்கள் வெட்கப்பட மாட்டோம். ஆனால் எப்போது தோல்வியடைந்து விடுவோம் என்று நினைத்து விளையாடுகிறோமோ அப்போதுதான் நாங்கள் தோற்று விட்டோம். நாங்கள் முதல் இன்னிங்ஸில் 26 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினோம். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் அறிவோம்.

ஆனால் இறக்கமற்றவர்களாக இருப்பது, ஒழுக்கத்துடனும் உள்நோக்கத்துடனும் பந்து வீசுவது மிகவும் முக்கியம். எங்கள் திட்டத்தில் இருந்து நாங்கள் விலகிச் சென்றோம். நான் பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடுத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் சிறு கவனமின்மையும் போட்டியை உங்களிடமிருந்து விலக்கி விடும்.

இதையும் படிங்க:இந்திய அணிகிட்ட எங்களால இத பண்ணவே முடியல.. இங்க அங்கனு எங்கையும் வேலைக்காகல – ஸ்டீவ் ஸ்மித் பேச்சு

எதிரணி நன்றாக விளையாடியது இதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த சூழ்நிலையில் செயல்பட்டதை விட தற்போது சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே கடைசி நாளில் எங்களால் முடிந்தால் அனைத்தையும் சிறப்பாக செய்ய முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -