இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான லெஜென்ஸ் கிரிக்கெட் லீக் 2024 வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேரை எந்த அணியும் ஏலத்தில் வாங்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் மூத்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் வகையிலான லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் 2024 தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தமாக இந்தியா கேப்பிட்டல், குஜராத் ஜெயின்ஸ், கோனார் சூர்யாஸ், மணிப்பால் டைகர்ஸ், சவுத்தர்ன்ஸ் சூப்பர் ஸ்டார்ஸ், அர்பன் ரைசர் ஹைட்ரபாத் உள்ளிட்ட அணைகள் பங்கேற்க உள்ளன.
இதில் இந்தியாவின் மூத்த முன்னணி கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் போன்ற வீரர்கள் பங்கு பெறுகின்றனர். இந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக டி20 உலக கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் கலக்கிய மூன்று வீரர்கள் இந்த தொடரின் ஏலத்தில் விலை போகாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அந்த மூன்று வீரர்கள் குறித்து காண்போம்.
1.ஆர்பி சிங்
ஆர்பி சிங் தனது காலத்தில் இந்தியாவுக்காக அறிமுகமானதிலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட முன்னணி வீரர்களில் ஒருவர். இவர் மேலும் 2007ம் ஆண்டு தோனி தலைமையிலான டி20 உலக கோப்பையில் பங்கு பெற்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி இருக்கிறார். வேகத்தில் மட்டுமல்லாமல் ஸ்விங்கிலும் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். இருப்பினும் தற்போது நடைபெற்ற ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்கவில்லை.
2.பிரக்யான் ஓஜா
இந்தியாவின் மற்றொரு முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த பிரக்யான் ஓஜாவை தற்போது எந்த அணியும் வாங்கவில்லை. இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் காலத்தில் முக்கிய வீரராக அறியப்பட்டார். மேலும் ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:250 ரன்.. பூரன் காட்டடி.. எதிரணிக்கு ரெட் கார்டு.. 10 வீரர்கள் மட்டுமே அனுமதி.. சிபிஎல் டி20 லீக்கில் சுவாரசியம்
3.பத்ரிநாத்
பத்ரிநாத் இந்திய அணியில் விளையாடுவதை விட சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் இக்கட்டான நேரத்தில் பொறுப்பாக விளையாடி அணியை மீட்டு வருவதில் கைதேர்ந்தவர். தமிழக வீரர் இவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.