250 ரன்.. பூரன் காட்டடி.. எதிரணிக்கு ரெட் கார்டு.. 10 வீரர்கள் மட்டுமே அனுமதி.. சிபிஎல் டி20 லீக்கில் சுவாரசியம்

0
1227
Pooran

தற்போது வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரிமியர் டி20 லீக்நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் புதிய விதியான ரெட் கார்டு கொடுக்கும் விதியின் படி, ஒரு அணியின் கேப்டனுக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்திருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

உலகெங்கும் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் வடிவம் கொண்டு சேர்த்து இருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளிலும் டி20 கிரிக்கெட் லீக்குகள் நடத்தப்படுகின்றன. இப்படி நடத்தப்படும் டி20 லீக்குகளை சுவாரசியப்படுத்துவதற்காக ஒவ்வொரு அமைப்பும் புதிய விதிகளை கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்விக்கின்றன. இந்த வகையில் கரீபியன் டி20 லீக்கில் ரெட் கார்டு முறை கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரெட் கார்டு விதி

இந்த விதியின் தனித்த அம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்கள் வீசி முடிக்க வேண்டும். அப்படி வீசி முடிக்காவிட்டால் எத்தனை ஓவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பின்தங்கி இருக்கிறார்களோ, அத்தனை ஓவர்களுக்கு 10 வீரர்கள் மட்டுமே களத்தில் பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதுவே ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் வீரர்களை குறைக்காமல், வெளிவட்டத்தில் ஐந்து வீரர்கள் நிற்பதற்கு பதிலாக நான்கு வீரர்கள் மட்டுமே நிற்கவைக்கப்படுவார்கள். இந்த வகையில் 11 வீரர்கள் தொடர்ந்து களத்தில் இருப்பார்கள். ஆனால் கரீபியன் பிரீமியர் லீக்கில் மட்டும் போட்டியை சுவாரசியப்படுத்துவதற்காக ஓவர் ரேட் குறைவாக இருந்தால் ஒரு வீரர் களத்தை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்.

- Advertisement -

பூரன் அதிரடி

நேற்று செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரன் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்த. கே சி கார்தி 35 பந்தில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியின் போது செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்கள் பந்து வீச வேண்டிய நேரத்தில் 19 ஓவர்கள் மட்டுமே பதிவு செய்ய இருந்தது. ஓவர் ரேட் குறைவாக இருந்த காரணத்தினால் களத்தில் இருந்த நடுவர் செயின்ட் கிட்ஸ் அணியின் கேப்டன் ஆண்ட்ரே ப்ளடசருக்கு ரெட் கார்டு கொடுத்தார். இதன் காரணமாக கடைசி ஒரு ஓவருக்கு அந்த அணி 10 வீரர்களை மட்டுமே வைத்து விளையாடியது.

இதையும் படிங்க : கோலிக்கும் எனக்கும் அந்த வித்தியாசம் பெருசு.. அவர் விஷயத்துல இது உண்மை – தோனி கருத்து

மெகா இலக்கை நோக்கி விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த விதி அமல்படுத்தப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -