கடைசி 4, 5 பந்துக்கு மட்டும் தல தோனி ஆட வரதுக்கு இதுதான் காரணம் – பிராவோ சொன்ன விஷயம்!

0
709
Brovo

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மோசமான செயல்பாட்டில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது!

மேலும் இந்த ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விடை பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

எனவே இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் முக்கியமான ஒரு அணியாக, எல்லா அணி ரசிகர்களும் கவனிக்கும் ஒரு அணியாக இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் தொடரில் ரன்கள் எவ்வளவு தேவைப்படும் நிலை இருந்தாலும் கடைசியாக ஜடேஜாவுக்கு பின் வந்தே விளையாடுகிறார். ரசிகர்கள் அவர் முன் வந்து விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் அவர் வருவதில்லை.

மேலும் சென்னை அணியில் கடந்த வருடம் விளையாடி இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று அந்த அணிக்கே பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ வந்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள ப்ராவோ கூறுகையில் “அவர் பேட்டிங் செய்ய வேண்டிய இடம் இதுதான். மற்ற அனைவரும் அவரை விட அதிகமாக பேட்டிங் செய்து தயாராக இருப்பவர்கள்.

மேலும் ஜடேஜா அம்பதி சிவம் துபே போன்றோர் பேட்டிங் செய்ய விரும்புவதால் தனது ஆர்டரை குறைத்துக் கொள்ளும் பொறுப்பை அவர் எடுத்துக் கொள்கிறார். மற்ற தோழர்களுக்கு அவர் முடிந்த வரையில் வாய்ப்பு தருகிறார். அவர் ஃபினிஷர் ஆக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்!” என்று கூறி இருக்கிறார்!