“இன்னைக்கு பார்த்த எங்க புயலுக்கு காரணம் இதுதான்.. எங்கள ரசிக்காம இருக்க முடியாது! – ஆட்டநாயகன் முகமது சமி அசத்தல் பேச்சு!

0
4571
Shami

இன்று உலகக்கோப்பை தொடரில் இந்தியா இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.

போட்டிக்கான டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் மூவரும் அரை சதங்கள் அடிக்க, இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பந்து வீழ்ச்சிக்கு திரும்பிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிரடியாக ஒன்பது விக்கெட்டுகளை அள்ளினார்கள். முகமது சமி இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி 55 ரன்களில் சுருண்டு 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது போட்டியில் விளையாடும் முகமது சமிக்கு இது இரண்டாவது ஐந்து விக்கெட்டுகள் ஆகும். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் மூன்று போட்டிகளில் 14 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இன்று ஐந்து விக்கெட் கைப்பற்றிய அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய அவர் “முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் கொடுத்த கடின உழைப்பு, நாங்கள் கண்டுபிடித்த ரிதம், இதனால்தான் இப்படிப்பட்ட ஒரு பந்துவீச்சு புயலை நீங்கள் மைதானத்தில் பார்த்தீர்கள்.

- Advertisement -

எங்கள் பந்துவீச்சு பிரிவு நம்ப முடியாத விஷயங்களை செய்கிறது. நாங்கள் ரிதத்தில் பந்து வீசும் பொழுது அதை யாரும் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை.

நாங்கள் பந்துவீச்சை ரசித்து ஒன்றாக ஒரே யூனிட்டாக வேலை செய்கிறோம். அதற்கான முடிவுகளைத்தான் நாம் பார்க்கிறோம். இந்தியாவிற்காக உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரராக வந்ததற்கு மகிழ்ச்சி. ஆனால் நான் எப்பொழுதும் என்னுடைய வேலையை வழக்கம் போல் செய்வதை செய்கிறேன்.

சரியான இடத்தில் பந்தை
பிட்ச் செய்ய பார்க்கிறேன். சரியான ரிதத்தில் இருக்க முயற்சி செய்கிறேன். பெரிய போட்டிகளில் நீங்கள் ரிதத்தை இழந்தால் மீண்டும் பெறுவது கடினம். எனவே தொடக்கத்தில் இருந்து சரியான லென்த் மற்றும் லைனில் வீச முயற்சி செய்கிறேன். இது நன்றாக வேலை செய்கிறது அப்படி இருக்கும் பொழுது இதை ஏன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யக் கூடாது!” என்று கூறி இருக்கிறார்!