இந்தியா வந்தாலே இவங்களுக்கு இதான் வேலை – உள்குத்தாக ஆஸ்திரேலியாவை தாக்கிய அஷ்வின்!

0
1425
Ashwin

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காப்பாற்ற ரசிகர்களை அதிகப்படுத்த போட்டியின் சுவாரசியத்தை கூடுதலாகக்க ஐசிசி டெஸ்ட் ஆடுகளங்களை முடிவு தெரியும்படி அமைக்க வலியுறுத்தியது!

இதற்கு இரண்டு ஆண்டுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் எந்த இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களுக்குள் வருகிறதோ அந்த அணிகளை வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தி சாம்பியன்ஷிப்பை அறிவிக்கிறது.

- Advertisement -

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, பொதுவான ஒரு இடமாக இங்கிலாந்தில் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆனது. இதற்கு அடுத்து தற்பொழுது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி அடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த இரு அணிகளும் இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தது மூன்று போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் ஆரம்பிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தங்களுக்கு இந்தியாவில் பயிற்சி ஆட்டங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டது. மேலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை ஆஸ்திரேலியாவில் அமைத்து, இந்திய தொடருக்கு வரவிருக்கும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை அந்த மைதானத்தில் போட்டி தந்து விளையாட வைத்திருக்கிறது. மேலும் இங்கு வரும் ஆஸ்திரேலியா அணிக்கு பெங்களூரில் உள்ள ஆலூர் மைதானத்தில் பயிற்சிகளை ஏற்பாடும் செய்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தில் தரப்படுகின்ற ஆடுகளம் போட்டிக்கான ஆடுகளத்திற்கு நேரெதிராகத்தான் இருக்கும். எனவே இந்தியாவில் பயிற்சி போட்டிகளை விளையாடுவது வீணான வேலை என்று கூறி இருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் ஆஸ்திரேலியா லெஜன்ட் விக்கெட் கீப்பர் ஹீலி இந்தியா எப்பொழுதும் இப்படித்தான் ஏமாற்றும் என்கின்ற வகையில் பேசி இருந்தார்.

தற்பொழுது இவர்களுக்கு பதிலடித்தரும் விதமாக உள்குத்தாக பேசி உள்ள இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ” ஒரு டூருக்கு வருவதற்கு முன்பு ஆஸ்திரேலியா இப்படியான வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடும். ஸ்லெட்ஜிங் செய்யும். இப்படி ஏதாவது பில்டப் செய்து கொண்டே இருப்பது அவர்களுடைய இயல்பு. இப்படி எல்லாம் ஏதாவது செய்வதால் போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடுகிறது. இது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்லும்படி இந்தியா அவர்களிடம் நடந்து கொள்வதில்லை” என்று கூறியவர்…

மேலும் தொடர்ந்து ” இதில் பல விஷயங்கள் இருக்கிறது. இந்தியாவும் சில நேரங்களில் வெளியில் போகும் பொழுது பயிற்சி போட்டிகளில் விளையாடாது. நாங்கள் பயிற்சி போட்டியில் விளையாடும் பொழுது எங்களை வைத்து டிக்கெட்டுகளை விற்று சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதிப்பதால் 11 பேர் மட்டுமே விளையாட வேண்டியதாக இருக்கும். எனவே நாங்களும் இப்படி சில காரணங்களால் பயிற்சி போட்டிகளை மறுத்தது உண்டு” என்று கூறியிருக்கிறார்!