20 ஓவரில் 287 ரன் அடிச்சது போதாதா.. மீண்டும் ஐபிஎல் விதியில் கை வைக்கும் பிசிசிஐ.. பாவம் பவுலர்கள்

0
486

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விதியான ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர் பந்துகள் வீசி கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

இந்த சூழ்நிலையில் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சையத் முஸ்தாக் அலி டிராபி மற்றும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்த விதி குறித்து முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு அணி தங்களது தேவைக்கேற்ப கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது ஒரு பந்துவீச்சாளரையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த விதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர் பந்துகளை வீசி கொள்ளலாம் என்ற விதியையும் அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஐபிஎல் தொடர் இருக்கிறது என்ற புகார் எழுந்து வந்த நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இந்த விதி அமையும் என்று பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு தொடர் பாதி வரையில் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு முழுக்க சாதகமாக இருந்ததால் இந்த விதி பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டு ஒரு போட்டியில் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் பந்துவீச்சாளர்கள் இரண்டு பவுன்சர் பந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவில்லை என்றும் கூறலாம். இந்த சூழ்நிலையில் தற்போது பிசிசிஐ ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர் பந்துகள் விதியை முஸ்தாக் அலி மற்றும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக மறுபரிசீலனை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து மாநில கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறும் போது ” இம்பாக்ட் பிளேயர் விதி மற்றும் பவுன்சர் விதி இந்த இரண்டும் முக்கிய புள்ளிகள் என்று நாங்கள் அறிவோம் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:4,4,4,6.. தோனியிடம் கற்ற பாடம்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் அமீர் ஓவரை விளாச.. அமேசான் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி.. சிபிஎல் 2024

மேலும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து கூறும் போது இம்பாட்டு பிளேயர் விதி ஒரு சோதனை முயற்சி போன்றது. அதை மெதுவாக செயல்படுத்தி உள்ளோம். இந்த விதியில் ஒரு கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இரு இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வாய்ப்பு பெறுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார். எனவே பிசிசிஐ செப்டம்பர் மாத தொடக்கத்தில் விதிகள் தக்கவைப்பு முறைகள் குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -