வெறும் 35 ஓவர்கள்.. முடிவுக்கு வந்த முதல் நாள்.. இந்தியா பங்களாதேஷ் போட்டி மழையால் பாதிப்பு.. 2வது டெஸ்ட்

0
258
Rohit

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக வெளிச்சம் இன்மையால் 35 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி நிறுத்தப்பட்டது.

இந்த தொடரில் இந்திய அணி சென்னை பக்கம் மைதானத்தில் முதல் போட்டிகள் வென்று முன்னிலையில் இருந்தாலும் கூட, சொந்த நாட்டில் பங்களாதேஷ் மாதிரியான அணிக்கு எதிராக போட்டியை வென்றாக வேண்டியது அவசியமாக இருக்கிறது. அப்பொழுதுதான் பெரிய அணிகளுக்கு எதிராக தோல்வி வந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல வசதியாக இருக்கும்.

- Advertisement -

கவலை அளிக்கும் கான்பூர் நிலவரம்

இன்றைய போட்டிக்கு முன்பான வானிலை அறிக்கையில் முதல் மூன்று நாட்களிலும் மழை பெய்வதற்கான இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூர் மைதானங்கள் போல மழை நீர் வடிகால் வசதி சிறப்பானதாக கிடையாது.

இதன் காரணமாக மழை வந்தால் மழை நீரை வடித்து போட்டி துவங்குவதற்கு நேரம் எடுக்கும். எனவே ஒரு நாளில் ஒரு கன மழை பெய்தாலும் அன்றைய நாள் போட்டி முழுதாகவே பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே மழையின் காரணமாக வெளிச்சம் இல்லாததால் போட்டி முன்கூட்டியே நிறுத்தப்பட்டு முதல் நாள் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

முதல் நாள் ஏமாற்றமான முடிவு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜாஹிர் ஹசன் 0 மற்றும் ஷத்மன் இஸ்லாம் 24 ரன்களில் வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து கேப்டன் நஜ்முல் சாந்து 31 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க: 147 ஆண்டு ஜடேஜா சாதனை.. அஸ்வின் உடைக்க அருமையான வாய்ப்பு.. கும்ப்ளே ஆசிய ஆசியா ரெக்கார்டு முறியடிப்பு

தற்போது களத்தில் மொமினுல் ஹக் 41 அனுபவ வீரர் முஸ்பிகியூர் ரஹீம் 6 ரங்கன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இன்று இந்திய அணி 35 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியது. பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையின் காரணமாக வெளிச்சம் இல்லாததால் போட்டி முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணியின் தரப்பில் ஆகாஷ் தீப் இரண்டு மற்றும் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -